வாட்ஸ்அப் செயலியில் உலா வரும் செய்திகள் சில சமயங்களில் தவறானவையாக, புரளிகளை கிளப்புவதாக இருக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் பரவும் தவறான செய்திகளை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது, மேலும் இது ஸ்பேம் செய்திகளின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.
இனிமேல் WhatsApp மூலம் அனுப்பப்படும் ஒவ்வொரு செய்திக்கும் ஒரு தனித்துவமான ஆல்பா-எண் ஹாஷ் விசையை நிறுவனம் உருவாக்கும். அதில் A முதல் Z வரையிலான எழுத்துக்களும் 0 முதல் 9 வரையிலான எண்களும் இடம் பெற்றிருக்கும்.
ஒவ்வொரு செய்திக்கும் உருவாக்கப்படும் ஹாஷ் விசைகள் தனித்தன்மை வாய்ந்தவை என்பதால், இது ஒரு செய்தியை முதலில் அனுப்பியவர் அல்லது உருவாக்கியவர் யார் என்பதை தெரிந்துக் கொள்வதை சுலபமாக்கும். அத்துடன் வாட்ஸ்அப் குறியாக்க தொழில்நுட்பத்தையும் மீறாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு செய்திக்கும் ஆல்பா-எண் ஹாஷ் ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாட்ஸ்அப்பை உரையாடல்களில் இறுதி முதல் குறியாக்கம் (end-to-end encryption) உறுதி செய்யப்படும்.













