Editor's Choice

ஜி7 மாநாட்டு நிகழ்வில் பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தை சார்ந்த 95 வயதான மகாராணி இரண்டாம் எலிசபெத் வாள் ஏந்தி கேக் வெட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நகரில் ஜி7 மாநாடு நடைபெற்று வருகிறது. 

இந்த நிகழ்வின் ஒருபகுதியாக நடைபெற்ற கொண்டாட்டதில் மகாராணி எலிசபத் கேக் வெட்டியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக வாள் கொண்டு கேக்கை வெட்டியுள்ளார். ராணி வாள் கொண்டு வெட்ட முயன்ற போது கத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இது கொஞ்சம் வித்தியாசமானது” என ராணி தெரிவித்துள்ளார். அதை கேட்டு அங்கு குழுமியிருந்த பலரும் சிரித்து மகிழ்கின்றனர். 

கடந்த ஏப்ரல் மாதம் அவரது பிறந்தநாளை கொண்டாட ராணி தவறிய நிலையில் இந்த நிகழ்வை ராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஒன்றாகவே கருதுகின்றனர் பிரிட்டன் மக்கள். கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். 

Editor's Choice

குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என பெற்றோர்கள் பலர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தற்போது சில நாடுகளில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக ரஷ்யாவில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாசி வழியாக தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனையில் இதுவரை உடல் வெப்பநிலை அதிகரிப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்தவித பக்கவிளைவுகளும் குழந்தைகளுக்கு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ரஷ்ய விஞ்ஞானி கமலேயா இன்ஸ்டிடியூட்டின் தலைவரான அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் அவர்கள் குழந்தைகளுக்கு நாசியில் தடுப்பூசி போட்டதில் இதுவரை எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, உலகம் முழுவதிலும் இருந்து கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டு கொண்டவர்களை வரவேற்கும் விதமாக தன் நாட்டின் எல்லைகளை திறந்துள்ளது ஸ்பெயின் அரசு. இதுபற்றி கூறியுள்ள அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கரோலினா டாரியாஸ், சுற்றுலாவில் உலகளாவிய தலைமையை மீட்டெடுக்கும் பணியில் தங்கள் நாடு ஈடுபட்டுள்ளதாகவும், தற்போது ஸ்பெயின் ஒரு பாதுகாப்பான இடமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
அதே போல ஸ்பெயினுக்குள் நுழையும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட நெகட்டிவ் பி.சி.ஆர் பரிசோதனையுடன் தடுப்பூசி போடாத ஐரோப்பியர்கள் இனி அதற்கு பதிலாக மலிவான ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். 

Editor's Choice

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆடிய போது சக வீரருடன் ஏற்பட்ட மோதலில் தலையில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ் தனக்கு சிறிது நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக PSL எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டிகள் பாகிஸ்தானிலிருந்து அபுதாபிக்கு மாற்றப்பட்டன. இந்தத் தொடரின் 19வது லீக் ஆட்டம் ஷேக் சயது மைதானத்தில் சனிக்கிழமை  நடைபெற்றது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் பெஷாவல் சல்மி அணிகளுக்கு இடையிலான போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான டுப்ளசிஸ்.

ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஃபாப் டுப்ளசிஸ் பந்து எல்லைக்கோட்டை தொடாமல் தடுப்பதற்காக மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தார். பந்தை பிடிக்கும் முயற்சியின் போது சக அணி வீரரான முகமது ஹஸ்னைனுடன் கடுமையாக மோதிக் கொண்டார். இந்த மோதலில் டுப்ளசிஸுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரம் மைதானத்தில் அமரவைக்கப்பட்ட டுப்ளசிஸ், பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனிடையே தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து ட்விட்டரில் டுப்ளசிஸ் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

மெசேஜ் அனுப்பி ஆதரவைக் காட்டிய அனைவருக்கும் எனது நன்றி. தற்போது ஓட்டலுக்கு திரும்பிவிட்டேன், குணமடைந்து வருகிறேன். சிறிதளவு நினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நான் சரியாகிவிடுவேன். விரைவில் களத்துக்கு திரும்புவேன் என நம்புகிறேன்” இவ்வாறு டுபிளசிஸ் தெரிவித்துள்ளார்.

டுபிளசிஸுக்கு நேர்ந்த இந்த எதிர்பாராதவிதமான நெருக்கடி ரசிகர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில் தற்போது அவர் நம்பிக்கையுடன் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

Editor's Choice

இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி ஓய்வு நேரத்தில் குதிரையுடன் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இடம் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

ராஞ்சி நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வரும் தோனி, அந்த வீட்டில் குதிரை ஒன்றையும் வளர்த்து வருகிறார்.  கடந்த மாதம், அந்த குதிரைக்கு மசாஜ் செய்ததுடன் அதனுடன் விளையாடினார்.  இந்த வீடியோவை அவரது மனைவி சாக்ஷி வெளியிட்டார்.
 
இந்த நிலையில், மற்றொரு வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  அதில், குதிரையுடன் தோனி ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  இதனால், கிரிக்கெட் போட்டியில் தோனியை காண முடியாத ரசிகர்கள் குதிரையுடனான ஓட்ட பந்தயத்தில் அவரை கண்டு ரசித்து வருகின்றனர்.
Editor's Choice

100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் வினோத நிறுவனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பல்வேறு காரணங்களுக்காக மனிதர்களை வாடகைக்கு அமர்த்துவது ஒன்றும் ஜப்பானியர்களுக்கு புதிது கிடையாது. தங்களை மோசடி செய்யும் இணையின் காதலரை மனம் மாற்றி அவர்களின் காதலை கைவிடச் செய்வதற்காகவும், நிறுவனங்களுக்காக நடுத்தர வயதுடையோரயும் வாடகைக்கு எடுத்து பரபரக்க வைத்த ஜப்பானியர்கள் தற்போது அதிக எடை கொண்ட குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் தொழியை தொடங்கி மிரள வைத்திருக்கின்றனர்.

“Debucari” என்ற இந்த புதிய சேவை ஜப்பானில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 கிலோவுக்கும் மேலான மனிதர்களை தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தங்களிடமிருந்து வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ள அந்நிறுவனத்தார் இதற்காக ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்கள் கட்டணமாக தர வேண்டும் இந்திய மதிப்பில் ரூ.1,300.

இந்த விநோத சேவை குறித்து கூறும் அந்நிறுவனர், குண்டு மனிதர்களை எதற்காக வாடகைக்கு எடுக்க வேண்டும் என உங்களுக்கு தோன்றலாம். உங்களை விட குண்டான மனிதரை பார்த்து உங்களை நீங்களே நன்றாக உணருவதற்கோ, எடை அதிகம் கொண்ட நண்பருக்கு ஆடை வாங்குவதற்காக செல்லும் போது அதனை உடுத்திப் பார்க்க ஒரு மாடல் தேவை என்றாலோ, டயட் பிளான் குறித்த விளம்பரங்களை எடுப்பதற்கான மாடல் தேவை என்றாலோ இப்படி பல காரணங்களுக்காக உங்களுக்கு குண்டு நபர்கள் தேவை எனும் போது எங்களை அனுகி சேவையை பெறலாம் என வித்தியாசமான கோணத்தில் பதில் தருகிறார்.

மேலும் “Debucari” -ன் விளம்பரங்களில் எங்குமே குண்டு நபர்களை அநாகரிகமாகவோ, அவமதிக்கும் வகையிலோ குறிப்பிடவில்லை என்றும் இதனை பாசிட்டிவாகவும், குண்டு நபர்களை அதிகாரப்படுத்தும் வகையில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

“Debucari”-ல் பதிவு செய்து கொள்ள நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், 100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட ஆண், பெண் என இருபாலரும் பதிவு செய்து கொள்ளலாம்,

மேலும் கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை முழுவதும் வாடகைக்கு எடுக்கப்படும் நபருக்கே அளிக்கப்படும் எனவும், கார்பரேட்களிடமிருந்து கமிஷனாக பெறப்படும் தொகையை மட்டுமே தாங்கள் எடுத்துக் கொள்வோம் என அவர் கூறுகிறார்.

Debucari நிறுவனத்திடம் தற்போது ஜப்பானின் தலைநகர் டோக்யோ, ஒசாகா மற்றும் அய்சி போன்ற நகர்களில் உள்ள குண்டு நபர்கள் அதிகளவில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

சுறா மீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்றாகும். இவை கூர்மையான பல பற்களைக் கொண்டுள்ளன. 22 சென்டி மீட்டர் நீளம் உள்ள பிக்மி சுறா முதல் 12 மீட்டர் நீளம் உள்ள திமிங்கலச் சுறா வரை சுறாக்களில் பல சிற்றினங்கள் உள்ளன. சுறா மீனின் உடல் எலும்பு வளையக்கூடிய குருத்தெலும்பால் ஆனது.

சுறாக்கள் மிகச் சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன. பத்து இலட்சம் துளிகளில் ஒரு துளி இரத்தம் இருந்தாலும் இவற்றால் கால் மைல் தொலைவில் இருந்து கூட முகர்ந்து விட முடியும். சுறாக்களின் கேள்திறனும் அதிகம்; நுண்ஒலிகளைக் கேட்கும் திறன் பெற்றவை. சுறாக்களுக்குக் குறைந்தது நான்கு வரிசைப்பற்கள் இருக்கும். இரையைக் குத்திக் கிழிக்கிறது எல்லாமே முதல் வரிசைப் பற்கள்தான். இதுல ஒரு பல் உடைந்து விழுந்தால், பின் வரிசையிலிருந்து ஒரு பல் அந்த விழுந்த இடத்துக்கு நகர்ந்து வந்துவிடும்.

சுறாக்களில் சுமார் 440 வகை உண்டு. இவற்றுள் 30 வகைகளே மனிதர்களைத் தாக்குபவை. சுறாக்குட்டிகளுக்குப் பிறக்கும்போதே பற்கள் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவை இரண்டு குட்டிகள் போடும். சில வகை சுறாக்கள் நூறு குட்டிகள் கூடப் போடும். பெரிய சுறாக்கள், குட்டிச் சுறாக்களைச் சாப்பிட்டுவிடும். ஆனால், தாய் தன் குட்டிகளைச் சாப்பிடாது. மாதக்கணக்கில் இவை பட்டினி கிடக்கும். உடம்பு இளைக்காது. ஈரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பும் எண்ணெயும் இவைகளைப் பாதுகாக்கும். வேல் சுறா 15 மீட்டர் நீளம் வரை வளரும், ட்வாப் சுறாவின் நீளம் 5 அங்குலமே.

மலேசியாவில் பவளப் பாறைகளுக்கு இடையே ரீஎப் வகை சுறா மீன்கள் கூட்டமாகக் காணப்படும். கடந்த ஏப்ரல் மாதம் போர்னியோ தீவுக்கு அருகே முக்குளிப்பவர்கள், ரீஎப் வகை சுறா மீன் ஒன்று மர்மமான தோல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு படம் எடுத்தனர். அந்த சுறாவின் தலையில் புண் போன்ற அடையாளங்கள் இருந்தன. அந்தப் படம் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து, முக்குளிப்பாளர் குழுக்களும் பாதுகாப்புக் குழுக்களும் அப்பகுதியில் உள்ள சுறாக்களைக் கண்காணிக்கத் தொடங்கினர். பல சுறாக்களின் உடலில் அதே போன்ற அடையாளங்கள் இருப்பதைக் கண்டறிந்து உள்ளனர்.

இதுகுறித்து கடல்துறை உயிரியல் நிபுணர்கள் கூறுகையில், 'கடல் வெப்பம் அதிகரித்து இருப்பது, மீன்களுக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம். கடலில் ரசாயனங்கள் கலப்பதும் காரணமாக இருக்கலாம். இதுகுறித்து ஆய்வுகளை தொடங்கி உள்ளோம்' என்றனர்.

பக்கம் 1 / 90