Editor's Choice

அடுத்த ஆண்டு ஜன.,1 முதல், ஏ.டி.எம்., மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை, ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்., வாயிலாக, மாதம், ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் மூன்று முறையும், பணப் பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கி வாடிக்கையாளர்களின், ஏ.டி.எம்., பரிவர்த்தனை கட்டணம், இறுதியாக, 2014, ஆகஸ்டில் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 2022, ஜன.,1 முதல், தற்போதுள்ள இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

அதுபோல, வங்கிகள் இடையிலான, ஏ.டி.எம்., நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய்; நிதி சாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Editor's Choice

"உலகின் பல்வேறு நாடுகளிலும் மூன்றாவது அலை தாக்கியிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலையைப் பார்த்திருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகைத் தாக்கிய ஸ்பேனிஷ் ஃப்ளூ பெருந்தொற்றுக் காலத்திலும் பெரிய அளவில் மூன்று அலைகள் உலக நாடுகளைத் தாக்கியிருக்கிறது. இந்த அனுபவங்களின் அடிப்படையில் கொரோனா பெருந்தொற்றிலும் மூன்றாவது அலையை எதிர்பார்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது" என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

பிரேசில் மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய திரிபை வெள்ளெலிகளில் பரிசோதனை செய்ததில் அவை உடல் எடையைக் குறைப்பதுடன், மூச்சுக் குழாயில் பல்கிப் பெருகும் என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

"இந்தியாவில் அதிகமாகப் பரவி வரும் டெல்டா வகையைத் தவிர பிற திரிபுகள் வருவதன் காரணமாக மூன்றாவது அலை வருவது நிச்சயம். இந்த ஆண்டுக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆயினும் உறுதியாகக் கணிக்க முடியாது" என்கிறார் தொற்றுநோய் நிபுணர்.

"குறைந்தபட்சம் 50 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டால் மட்டுமே கொரோனாவின் மூன்றாவது அலையைத் தடுக்க முடியும்" என்று கூறுகிறார் மருத்துவர். அரசிடம் இது வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த 7-ஆம் தேதி வரை சுமார் ஒரு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் மட்டுமே. இது மொத்த மக்கள் தொகையில் 3 சதவிகிதத்துக்கும் குறைவு.

ஒட்டுமொத்தமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால் 23 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் 4.66 கோடி பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி கிடைத்திருக்கிறது. நாட்டின் எந்தப் பெரிய மாநிலத்திலும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்தைத் தாண்டவில்லை.

"மருத்துவ கட்டமைப்பில் முன்னிலையில் இருக்கும் தமிழ்நாடு, தடுப்பூசி போடுவதில் பின்தங்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. மூன்றாவது அலை வராமல் தடுப்பதில் இது மிகப்பெரிய சவாலாக இருக்கும்".

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்கா 63 சதவிகிதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறது. அங்கு பாதிப்பு குறைவதற்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கும் இதுவே முக்கியமான காரணம்.

ஆனால் இந்தியாவில் பொதுமுடக்கங்கள் மூலமாகவே பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் தளர்வுகள் அளிக்கும்போது தன்னிச்சையாகவே தொற்றும் அதிகரிக்கத் தொடங்கிவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஏற்கெனவே பிரேசில் போன்ற நாடுகளில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

"மூன்றாவது அலையில் தடுப்பூசி போடாதவர்கள் இணைநோய் இருப்பவர்கள், வயதானவர்கள் ஆகியோரே அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது".

மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பெற்றோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டில் இருந்து பெரும்பாலான குழந்தைகள் இதுவரை வீட்டை விட்டு வெளியே சென்றிருக்க மாட்டார்கள். அவர்களிடம் கொரோனாவுக்கான எதிர்ப்பு ஆற்றல் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் பரவியிருக்கிறது.

தடுப்பூசி பற்றாக்குறை, புதிய வைரஸ் திரிபுகளின் பெருக்கம், கிராமப்புறங்களில் வலுவற்ற சுகாதாரக் கட்டமைப்பு, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க வேண்டிய கட்டாயம் போன்றவை அடுத்த கொரோனா அலையைக் கையாள்வதில் சவால்களாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

புதியவகைத் திரிபுகள் உருவாவதை உடனடியாகக் கண்டறிந்து கூறும் வகையிலான மரபீனி வரிசையைக் கண்டறியும் ஆய்வகங்கள் இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளன என மத்திய அரசின் ஆய்வுப் பிரிவில் பணியாற்றும் ஒரு அதிகாரி கூறுகிறார்.

இந்தியாவில் இதற்காக மொத்தம் 10 "Genome sequencing" ஆய்வகங்கள் இருக்கின்றன. இவையும் டெல்லி, தெலங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற சில மாநிலங்களில் மட்டுமே அமைந்திருக்கின்றன. புதிய வகைக் கொரோனா திரிபுகளை விரிவாகக் கண்டறிந்து அவற்றைப் பரவ விடாமல் கட்டுப்படுத்துவதற்கு கூடுதலாக ஆய்வகங்கள் அவசியம் என்ற கோரிக்கை பரவலாக எழுந்திருக்கிறது.

கொரோனா பரவல் முடிந்துவிட்டது என்று ஒருபோதும் மகிழ்ந்துவிடக்கூடாது என்ற பாடத்தை கொரோனாவின் இரண்டாவது அலை கற்றுத் தந்திருக்கிறது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் ஆக்சிஜன் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் அடுத்த அலையை எதிர்கொள்ள உதவும். "தேவையற்ற மருந்துகள்" பயன்படுத்தப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Editor's Choice

அத்திப்பழம் என்பதை நம்மில் பலரும் பார்த்திருக்கமாட்டார்கள். அத்தி மரங்களின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால், அதன் வரத்து குறைந்துள்ளது; விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. சாதரணமாக இந்த பழம் கிடைப்பதில்லை.

ஆனால் உலர வைக்கப்பட்ட அத்திப்பழமானது நாட்டு மருந்து கடைகளிலும், டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கிடைகிறது. விலை சற்று அதிகம்தான் என்றாலும் தயங்காமல் வாங்கி சாப்பிடுங்கள். உலர் அத்தியை பாலில் கலந்து ஜூஸ் போட்டு பருகலாம். மெல்லிய சுவையுடன் இருக்கும்.

உலர் அத்தியில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் மற்றும் இதர செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.

கலோரியும், கொழுப்பும் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இப்பழத்தை ஜூஸாக பருகலாம். பசியும் அடங்கும்.

அதிகளவு பொட்டாசியமும், குறைந்தளவு சோடியமும் கொண்டிருக்கும் பழம் என்பதால் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும் வல்லமை வாய்ந்தது இப்பழம்.

விட்டமின் சி மற்றும் இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்தியை தினமும் உட்கொண்டு வருவோருக்கு ஆன்டி-ஆக்சிடன்ட் சத்துக்கள் வளமாக கிடைக்கும்.

இந்த ஆன்டி-ஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் வல்லமை வாய்ந்ததாகும்.

இரும்புசத்து நிறைந்த அத்திப்பழம் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதையும் தடுகிறது.

அத்திப்பழம் ஃப்ரெஷ்ஷாகவோ அல்லது உலர் அத்திப்பழமோ இரண்டுமே அதிகமாக எடுத்துகொள்ள கூடாது. இது நார்ச்சத்து நிறைந்தவை என்பதால் இது செரிமானப்பிரச்சனையை உண்டாக்கிவிடக்கூடும். அத்தி நார்ச்சத்தும் வைட்டமினக்ளும் தாதுக்களும் நிறைந்த மூலமாகும்.

தீமைகள்

ஆய்வுகளின் படி அத்திப்பழங்களை அதிகமாக உட்கொள்வது அபாயகரமான சுகாதார பிரச்சனைகளை உண்டாக்கும். இது மருத்துவ சிகிச்சை எடுக்கும் அளவுக்கு தீவிரமாகவும் வர வாய்புண்டு. அத்திப்பழத்தை சரியான முறையில் எடுத்துகொள்வது அவசியம். அத்திப்பழம் என்ன மாதிரியான பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

அத்தி இலகுவானதாகவும் ஜீரணிக்கவும் எளிதாக இருக்கும். ஆனால் இவை கடினமானவை. உண்மையில் அத்திப்பழங்களை அதிகமாக எடுத்துகொள்ளும் போது அது வயிற்று வலியை உண்டாக்கும். அதோடு இதில் கரையக்கூடிய நார்ச்சத்தும் மிகுந்து இருப்பதால் அதிகமாக எடுக்கும் போது இது வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாக்கிவிடும்.

இது வயிறு வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகின்றன. அத்திப்பழத்துக்கு பிறகு வயிறு உப்புசம் வயிறு வலி ஏற்பட்டால் சோம்பு நீர் அல்லது சீரக நீர் மூலம் வலி உபாதையை குறைக்கலாம். அதே நேரம் தொடர்ந்து எடுத்துகொண்டால் மருத்துவரை சந்திக்க வேண்டியிருக்கலாம்.

அத்திப்பழம் விதைகளால் நிரம்பியுள்ளது. பெரும்பாலும் இதை சாப்பிடும் போது இதன் விதைகளை மெல்லுவதை காட்டிலும் விழுங்குவது தான் அதிகம் செய்கிறோம். இதனால் ஜீரணிப்பது கடினமாகிறது. இந்த விதைகள் குடல்களில் அடைப்பை உண்டு செய்கிறது .உலர்ந்த அத்திப்பழங்கள் வயிறு வீக்கம் போன்று கல்லீரலுக்கும் குடலுக்கும் தீங்கு விளைவிக்க செய்கிறது. மேலும் இது சூடாக இருப்பதால் மலக்குடலில் இரத்தப்போக்கு உண்டாகலாம்.

தொடர்ந்து அதிகமாக அத்திப்பழம் எடுக்கும் போது அது ரத்த சர்க்கரை அளவை குறைக்க செய்யலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் பண்பு தீங்கு விளைவ்க்கும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் அத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதோடு சர்க்கரை மாத்திரைகளோடு அத்தியும் சேர்ந்து எடுத்துகொண்டால் அது வேகமாக ரத்த சர்க்கரை அளவை குறைக்க வாய்ப்புள்ளது.

அத்திப்பழத்தை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். சிலருக்கு இயற்கையாகவே ஒவ்வாமை அலர்ஜி ஆஸ்துமா பிரச்சனை கொண்டிருப்பவர்கள் அத்திப்பழத்தை கண்டிப்பாக எடுக்க கூடாது.

அத்திப்பழத்தில் இருக்கும் ஆக்ஸலேட்டுகள் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துகிறது. கால்சியம் குறைபாடு எலும்புகளின் அடர்த்தியை மென்மையாக்க செய்யும். எலும்புகளை சேதப்படுத்தும். எலும்பு பலவீனமாவதோடு பற்களையும் இவை பாதிக்க செய்யும். அதிகமான அத்திப்பழம் உடல் கால்சியம் உறிஞ்சுதலை கட்டுப்படுத்துவதால் கால்சியம் குறைபாடு உண்டாக வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தில் இருந்து அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்ற அத்திப்பழம் உதவக்கூடும். ஆனால் அது ஆக்சலேட்டுகள் நிறைந்தவை என்பதையும் மறக்க கூடாது. இது சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கற்களுக்கான முக்கிய காரணியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அத்திப்பழத்தை அளவான முறையில் எடுத்துகொண்டால் ஆரோக்கியம் காக்கலாம்.

Editor's Choice

சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம், அருகிவரும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் என 5000 உயிரினங்களை பட்டியலிட்டுள்ளன. அவற்றில் சீனாவில் உள்ள யுனான பாக்ஸ் ஆமை, சுமத்திரா காண்டாமிருகம், ஆரஞ்சு நிறத்தில் வயிற்றுப் பகுதி கொண்ட கிளி ஆகியவையும் அடங்கும்.

குறிப்பாக சுமத்திரா காண்டமிருகம் நூற்றுக்கும் குறைவாகதான் உள்ளதாக கூறுகிறது சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். வேட்டை ஆடப்படுவதுதான் இந்த எண்ணிக்கை குறைவதற்கு முக்கியமான காரணம் என்று கூறுகிறது இந்த சங்கம்.

ஏதோ ஒரு விலங்கு அழிந்தால் நாம் ஏன் கவலைக் கொள்ள வேண்டும்? - என்பது நம் கேள்வியாக இருந்தால், ஏதோ ஒரு விலங்கின் அழிவு மனித அழிவுக்கு வழிவகுக்கலாம் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

" இது ஓர் உயிர்வலைபின்னல், இந்த பின்னலில் ஒரு கண்ணி அறுப்பட்டால், இன்னொன்றுக்கு நிச்சயம் ஆபத்தும் வரும், அழிவும் வரும். உணவு சங்கிலியில் மனிதன் மேலே இருக்கிறான். மேலே இருப்பதால், அதிக ஆபத்தும் பொறுப்பும் ஒருங்கே மனிதனுக்குதான் இருக்கிறது." என்கின்றனர் சூழலியாளர்கள்.

"இதை எளிமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால், பாசியை சொல்லலாம். மனிதன் பாசியை நேரடியாக உண்பதில்லை. ஆனால் பாசியை உண்ணும் மீனை மனிதன் உண்கிறான். பாசியில் விஷம் ஏறியது என்றால், அது உண்ணும் மீனை முதலில் பாதிக்கும். பின், மீனை உண்ணும் மனிதனை பாதிக்கும். அது போலதான் ஓர் உயிரினத்தின் அழிவும்." என்கிறார்கள்.

ஓர் உயிரினத்தின் அழிவு, வாழ்விட அழிவிற்கும் வழிவகுக்கும்.

குறிப்பாக புலி, காண்டாமிருகம் போன்ற குடை இனம் (Umbrella Species) அழிந்தால், அவை ஆளுகை செலுத்தும், அதன் வாழ்விடமும் நாசமாகும்.

ஏதோ ஒரு விலங்கு அழிகிறது என்று மெளனியாக இருந்துவிடக்கூடாது. அழிந்து வரும் உயிரினத்தை காப்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Editor's Choice
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மாதம் 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான சீருடை அறிமுக விழா கடந்த வாரம் டெல்லியில் நடந்தது. இந்திய அணிக்குரிய சீருடை உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை சீனாவைச் சேர்ந்த லி நிங் என்ற விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ ஸ்பான்சர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் து இருந்து நீக்கப்பட்டுள்ளது.
 
‘சீன நிறுவனம் ஸ்பான்சரில் இருந்து நீக்கப்பட்ட விஷயத்தில் யாருடைய பெயரையும் இழுக்க விரும்பவில்லை. மீடியாக்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் இருந்து வந்த விமர்சனத்தை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சர் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கான காலம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஸ்பான்சருக்காக யாருக்கும் நெருக்கடி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஸ்பான்சர் ஒப்பந்தம் பரஸ்பர சம்மதம் கொண்டதாக இருக்க வேண்டும். இந்திய அணியினரின் சீருடையில் ஸ்பான்சர் பெயர் இடம் பெறுமா? அல்லது ஸ்பான்சர் பெயர் இல்லாமல் இருக்குமா? என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் முடிவு செய்யப்படும். சீருடைகள் தயாராக இருக்கிறது என கூறுகிறார்  இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா.
 
கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இந்தியா உள்பட 10 நாடுகளுக்கு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்று வெளியாகி இருக்கும் செய்தி யூகத்தின் அடிப்படையிலானதாகும். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இருந்தோ? அல்லது போட்டி அமைப்பு குழுவிடம் இருந்தோ எங்களுக்கு அப்படி எந்த தகவலும் வரவில்லை. ஆனாலும் இந்த விஷயத்தில் தெளிவான நிலையை தெரிவிக்குமாறு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் போட்டி அமைப்பாளர்களை நாங்கள் கேட்டு இருக்கிறோம். கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தில் மற்ற பல நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் தான் இருக்கிறது’ என்றார்.
 
இதற்கிடையே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகிப்பவர்களின் சீருடையில் எந்தவொரு ஸ்பான்சர் நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாது. சீருடையில் இந்தியா என்று மட்டுமே பொறிக்கப்பட்டு இருக்கும் என்று மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ டுவிட்டரில் அறிவித்தார்.
Editor's Choice

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த சில மாதங்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு பயந்து அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று பரவலாக சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், சுமார்  4 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக பொது வெளியில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டுள்ளார். முன்பு இருந்ததை விட உடல் மெலிந்த நிலையில் கிம் ஜாங் உன் தற்போது தோற்றமளிக்கிறார். இதனால், அவரது உடல் நிலை குறித்தும் ஊகங்கள் எழத்தொடங்கியுள்ளன.

புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட கிம் ஜாங் உன், உடல் நிலை பற்றி கடந்த சில ஆண்டுகளாகவே செய்திகள் உலா வருகின்றன. கடந்த 2014- ஆம் ஆண்டு 6 வாரங்களுக்கு திடீரென பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் கிம் ஜாங் உன் இருந்தார்.  அதீத உடல் எடை காரணமாக அவர் இருதய நோய் பாதிப்புக்கு  ஆளாகலாம் எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளிவந்தன. 

பக்கம் 4 / 90