- திருக்குறள்
- Read Time: 1 min
- படிப்புகள்: 562
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
மு.வ உரை:
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால் யாம் அறிவுடையேம் என்று ஒருவன் தன்னைத்தான் மதித்துகொள்ளும் செருக்காகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்.
Translation:
What is stupidity? The arrogance that cries,
'Behold, we claim the glory of the wise.'.
Explanation:
What is called want of wisdom is the vanity which says, "We are wise".













