செவ்வாய் கிரகத்தில் சீனா விண்கலன் தரையிறக்கம்

SOCIAL SHARE
Pin It

அமெரிக்காவைத் தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தில் விண்கலனை வெற்றிகரமாக தரையிறக்கி சரித்திரம் படைத்துள்ளது சீனா. இந்தத் தகவலை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விண்கலனை தரையிறக்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Chinese President Xi Jinping) வாழ்த்து தெரிவித்தார்.

"சவாலை அனைவரும் தீரத்துடன் எதிர்கொண்டீர்கள். சிறப்பாக செயல்பட்டீர்கள். கிரகங்களை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் நமது நாட்டை சேர்த்துள்ளீர்கள்" என்று சீன அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (0100 பெய்ஜிங் நேரம் சனிக்கிழமை)  அன்று, தியான்வென்-1 (Tianwen-1) விண்கலம் சுற்றுப்பாதையை அடைந்தது. விண்கலனில் பொருத்தப்பட்டிருந்த தரையிறங்கும் தொகுதி மூன்று மணி நேரம் கழித்து சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைந்தது என்று அதிகாரப்பூர்வ சீனா விண்வெளி செய்தி China Space News தெரிவித்துள்ளது.   

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 (Tianwen-1) விண்கலன், கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ (rover) கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் எடை 240 கிலோ ஆகும்.

செவ்வாய்கிரகத்தின் புவியியல் அமைப்பு குறித்து இந்த தியான்வென்-1 (Tianwen-1) விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான புகைப்படங்களை எடுக்க சக்தி வாய்ந்த கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தியான்வென்-1  ரோவர் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் பயன்படும்.

ARUNACHALAM