திண்டுக்கல் மாவட்டத்தில் பேட்டரி வீல்சேர் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளின் வீல்சேர் பழுதடைந்திருந்தாலோ அல்லது செயல்படவில்லை என்றாலோ அதை பழுது பார்ப்பது மிகவும் கடினம் என்பதால் அதை பழுது பார்க்காமல் அப்படியே வீட்டில் வைத்திருப்பீர்கள். இவ்வகை மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக வருகிற 19.10.2020 முதல் 10.11.2020 வரை இலவசமாக பேட்டரி வீல்சேர் பழுதுபார்க்கும் முகாம் நடைபெறுகிறது. உங்களது பேட்டரி வீல்சேர் பழுதடைந்திருந்தால் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக எண்ணாகிய 0451- 2460099 என்கிற தொலைபேசி தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்













