'டிஜிலாக்கர்' செயலில், அடுத்தகட்டமாக, நம்முடைய இன்ஷுரன்ஸ் பாலிசி ஆவணங்களையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம். நம்முடைய முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக, அறிமுகம் செய்யப்பட்டது தான் 'டிஜிலாக்கர்' செயலி.
இந்த செயலியை பயன்படுத்தி, தற்போது, நம்முடைய ஓட்டுனர் உரிமம், கார் பதிவு, வாக்காளர் அட்டை, பான் கார்டு, கல்லுாரி மற்றும் பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் பல ஆவணங்களை, டிஜிட்டல் ஆவணங்களாக சேமித்து வைத்து கொள்ள முடியும்.
இந்நிலையில், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ. காப்பீட்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு, 'டிஜிலாக்கர்' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, காப்பீட்டு பாலிசி ஆவணங்களை அதில் சேமிப்பதற்கு உதவ வேண்டும் என, தெரிவித்து உள்ளது.
இதன் மூலம் செலவுகளை குறைப்பதுடன், பாலிசி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் தவிர்க்க முடியும்.













