உலகப் புகழ் பெற்ற ‘தாஜ்மஹால்’ நினைவுச்சின்னத்தின் பெயர் ராம் மஹால் என்று மாற்றம் செய்யப்படும் என பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் கூறுகிறார்.
முதலில் தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலாக இருந்தது. எனவே, இது உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ராம் மஹால் என்று பெயர் மாற்றப்படும் என்று மாநில எம்.எல்.ஏ கூறுகிறார்.
"சிவாஜியின் வழித்தோன்றல்கள் உத்தரபிரதேச தேசத்திற்கு வந்துள்ளனர். சமர்த் குரு ராம்தாஸ் சிவாஜியை இந்தியாவுக்குக் கொடுத்தது போலவே, கோரக்நாத் ஜி, யோகி ஆதித்யநாத்தை உத்தரபிரதேசத்திற்கு வழங்கியுள்ளார்" என்று சிங் கூறினார்.
"தேச விரோத மனப்பான்மை" கொண்டவர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்பட மாட்டாது என்று அவர் கூறினார். "இந்தியாவின் பெருமையையும் இந்தியத்தன்மையையும் பேசுபவர்கள் மட்டுமே இந்நாட்டின் தலைவர்களாக மாறுவார்கள்" என்று அவர் கூறினார்.
தைரியமான கருத்துக்களுக்காக அறியப்பட்ட பாஜக தலைவர், இதுபோன்ற சர்ச்சைக்குரிய பேச்சுக்களை முன்வைப்பது ஒன்றும் புதிதல்ல.
கடந்த ஆண்டு, ஹத்ராஸில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, சிறுமிகளுக்கு ’கலாசாரத்தை’ கற்பித்தால் கற்பழிப்பு நிறுத்தப்படலாம் என்று அவர் கூறியிருந்தது மிகப் பெரிய சர்ச்சைகளை எழுப்பியது.













