#TNLockdown, #TNGovt டுவிட்டரில் டிரெண்ட்

SOCIAL SHARE
Pin It

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

திருவிழா, மதக் கூட்டங்களுக்கு தடை. தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே செயல்பட அனுமதி. ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர், இறுதி ஊர்வலத்திற்கு 50 பேர் மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த அறிவிப்பு வெளியான உடனே இந்த விவகாரம் டுவிட்டரில் #TNGovt, #TNLockdown ஆகிய ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது. இந்த ஹேஷ்டாக்கில் பதிவிட்ட சிலரின் கருத்துக்கள்...

* தேர்தல் காலத்தில் மக்களை கூட்டம் கூட்டமாக சேரவிட்டுவிட்டு, நோய்தொற்றும் அதிகமாகிவிட்ட பின்பு இப்போது கட்டுப்பாடுகள் விதிப்பதால் யாருக்கு என்ன பயன்.

* திருவிழா, மதக் கூட்டங்கள் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் டாஸ்மாக்கிற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாதது ஏனோ.

* தேர்தல் முடிந்துவிட்டது. அதனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. தேர்தல் சமயங்களில் மட்டும் வைரஸ் பரவவில்லையா. வைரஸ் வேறு எங்கும் இல்லை, அரசியல்வாதிகளிடம் தான் உள்ளது. மக்களின் பாதுகாப்பை விட தேர்தல் முக்கியமா. எது எப்படியோ அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

* இது பேசாமல் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம். இந்த கட்டுப்பாடுகள் எல்லாமே வெறும் கண் துடைப்பு மட்டுமே.

* போன வாரம் வரைக்கும் அவளோ கூட்டத்த கூட்டி பிரச்சாரம் நடத்திட்டு இப்ப வந்து பஸ்ல நின்னுட்டு போகக்கூடாது, திருவிழா நடத்த கூடாதுனு சொல்லிட்டு இருக்காங்க.

இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களையும், ஆதங்கத்தையும் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

ARUNACHALAM