ஆன்லைனில் களைகட்டும் பேரீச்சை பழ விற்பனை

SOCIAL SHARE
Pin It
கொரோனா பாதிப்பு மற்றும் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக ஆன்லைனில் பேரீச்சை பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அமீரகத்தின் முக்கிய விவசாய தொழில்களில் பேரீச்சம் பழ உற்பத்தி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் உள்நாட்டின் பொருளாதாரத்தில் இதன் வர்த்தகம் குறிப்பிட்ட பங்களிப்பை தந்து வருகிறது.

உள்நாட்டை பொறுத்தவரையில் ரமலான் மாதத்தில் பேரீச்சம் பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும்.

இந்த மாதத்தில் இப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் தண்ணீருடன் முதலில் நோன்பாளிகள் உண்பது பேரீச்சம் பழம் மட்டுமே. மிக முக்கிய இடம் பிடித்துள்ள இந்த பேரீச்சம் பழங்கள் தொழிற்சாலைகள், குடிசை தொழில்கள் என பல்வேறு முறைகளில் உற்பத்தி செய்யப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு மற்றும் சுட்டெரிக்கும் வெயில் ஆகியவற்றால் பொதுமக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாகவும், அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்கி இருப்பதாலும் ஆன்லைனில் பேரீச்சம் பழங்களின் விற்பனை களைகட்டி வருகிறது. ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த ஆன்லைன் விற்பனையில் பேரீச்சம் பழமாவதற்கு முன் உள்ள கிமிரி (பச்சை நிறத்தில் உள்ள காய்), கலால் (பச்சை ஆப்பிள் போன்ற நிறம்), பிஸ்ர் (மஞ்சள் நிறமாக மாறும் நிலை), ருதாப் (இனிப்பு சேரும் நிலை) மற்றும் தமார் (முழு பழம்) ஆகிய நிலைகளில் உள்ளவற்றை அதிக அளவில் பொதுமக்கள் வாங்குகின்றனர்.

ARUNACHALAM