ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம் - பிசிசிஐ

SOCIAL SHARE
Pin It

கொரோனா தொற்றால் கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். டி-20 தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

கோல்கட்டா அணி வீரர்கள் சந்தீப் வாரியார், வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் ஐதராபாத் அணியின் விருத்திமான் சஹா, டில்லி அணியின் அமித் மிஸ்ரா மற்றும் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி மற்றும் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் நிறுத்தம் செய்யப்படுவதாக  பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார். 
 
ஐபிஎல் போட்டிகள் ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கபட்டு புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மொத்தம் 60 போட்டிகளில் 29 போட்டிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளன. மே.30 ஆம் வரை நடக்க இருந்த இந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

ARUNACHALAM