கொரோனாவில் இருந்து பாதுகாக்க யாகம் வளர்க்க வேண்டும் - அமைச்சர் யோசனை

SOCIAL SHARE
Pin It

கொரோனாவில் இருந்து தப்பிக்க யாகம் செய்வது பலன் தரும் என்று யோசனை சொல்வது ஆன்மீகவாதியோ அல்லது சாமியாரோ அல்ல, ஒரு அமைச்சர் என்பது ஆச்சரியம். 
 
கொரோனாவால் நாடே நிலைகுலைந்து இருக்கும் நிலையில், மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அதேபோல், கொரோனா பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கும் ஆலோசனைகளுக்கும் பஞ்சமில்லை. 

பல்வேறு விசித்திரமான யோசனைகளை கேட்டிருக்கும் மக்களுக்கு இன்னுமொரு ஆச்சரியமான யோசனையை அள்ளித் தெளித்திருக்கிறார் மத்தியபிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர்.

பா.ஜ.க. ஆளும்கட்சியாக இருக்கும் மாநிலத்தில், அக்கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சர் இப்படி கருத்து சொல்வதில் வியப்பேதும் இல்லை தான். ஆனால், எப்படி இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

‘அனைவரும் யாகம் வளர்த்து, அதன் நெருப்பில் இரண்டு பொருட்களை போட வேண்டும். சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறை இது. பெருந்தொற்றை ஒழிப்பதற்கு நீண்டநெடுங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் புனிதமான செயல்பாடு ஆகும்.

இது மதவெறியோ, சடங்கோ அல்ல. ஒவ்வொருவரும் இவ்வாறு யாகம் வளர்த்தால், கொரோனாவின் மூன்றாவது அலை இந்தியாவை எட்டிக்கூட பார்க்காது என்கிறார் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் உஷா தாக்கூர்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெற வேதம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்று கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார் அமைச்சர் உஷா தாக்கூர். பசு எரு வறட்டியை நெருப்பில் இட்டு எரித்தால் 12 மணி நேரத்துக்கு வீடு தூய்மையாக இருக்கும் என்று மத்தியப் பிரதேச அமைச்சர் உஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM