ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பானிய மக்கள் எதிர்ப்பு

SOCIAL SHARE
Pin It

ஜப்பான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கான 4வது அலை வீசி வருகிறது.  இதனால் டோக்கியோ மற்றும் ஒசாகா ஆகிய பெருநகர பகுதிகள் உள்பட 10 மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது,

அந்நாட்டு பிரதமர் யோஷிஹிடே சுகா, கடந்த ஏப்ரல் 25ந்தேதி முதல் மே 11ந்தேதி வரை 4 மாகாணங்களில் அவசரகால நிலைக்கான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
 
இதனால் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் மற்றும் சேவைகள் தவிர்த்து மற்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 
 
ஆனால், டோக்கியோ, ஒசாகா ஆகிய மாகாணங்களில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  அதனால், ஜப்பானில் அவசரகால நிலையானது மே 31ந்தேதி வரை 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலால் இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.  இதன்படி, வருகிற ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும்.
 
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் 10 வாரங்களே மீதமுள்ளன.  இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே ஒன்றில், ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
 
இந்த சர்வேயில், 1,527 பேர் பங்கு பெற்றனர். அவர்களில் 43 சதவீதத்தினர் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் 40 சதவீதத்தினர், நாட்டில் கொரோனா பாதிப்பினை முன்னிட்டு போட்டிகளை வேறு நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் பதிலளித்து உள்ளனர்.
 
போட்டிகளை நடத்த 14 சதவீதத்தினரே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
 
சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 59 சதவீதத்தினர், ஒருவேளை போட்டி நடத்தப்பட்டால் ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என்றும், 33 சதவீதத்தினர் குறைவான ரசிகர்கள் வரலாம் என்றும் தெரிவித்தனர்.  வழக்கம்போல் போட்டிகளை நடத்தலாம் என 3 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்து உள்ளனர்.
 
வெளிநாட்டில் இருந்து வர கூடிய போட்டியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரால் கொரோனா வைரசானது பரவ கூடிய ஆபத்து உள்ளது என்று 87.7 சதவீதம் பேர் கவலை தெரிவித்து உள்ளனர்.
 

ARUNACHALAM