கொரோனாவைவிட, புகைபிடித்தலில் உயிரிழப்புகள் அதிகரிப்பு

SOCIAL SHARE
Pin It

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகைபிடிக்கும் பழக்கம் உலகில் 1.1 மில்லியன் மக்களுக்கு இருப்பதாக வெளியாகும் தகவல்கள் கவலைகளை ஏற்படுத்துகின்றன.

2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்கள் புகைபிடிப்பதால் உயிரிழந்ததாக புதிய ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது. 2019க்கு பிறகு கொரோனா பாதிப்பு வந்துவிட்டது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 150 மில்லியன் பேர் புகைப்பிடிக்கத் துவங்கியுள்ளனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வின் படி, 25 வயதிற்குள் இளைஞர்கள் புகைபிடிப்பதற்கு அடிமையாகி விடுகிறார்கள், இது இளம் தலைமுறையினருக்கு மிகப் பெரிய சாபக்கேடு.

20 நாடுகளில் ஆண்களுக்கும் 12 நாடுகளில் பெண்களுக்கும் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆசிய கண்டத்தில் மூன்றில் ஒருவர் புகைப் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். இந்த கொடிய பழக்கத்தால் சீனா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடு. இந்தியா, அதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. இந்தோனேசியா, ரஷ்யா, அமெரிக்கா, பங்களாதேஷ், ஜப்பான், துருக்கி, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இளம் வயதினரை இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான வழிகளை அரசாங்கங்கள் கொண்டு வருவது மிகவும் முக்கியமானது. 20 முதல் 25 வயதிற்குள் இந்த பழக்கத்தை பழகாவிட்டால் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன.

"இளைஞர்கள் தங்கள் 20 களின் நடுப்பகுதியில் புகைப் பழக்கம் இல்லாதவர்களாக இருப்பதை உறுதி செய்வது அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்கும் பழக்கத்தை தீவிரமாக குறைக்கும்" என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புகையிலை மற்றும் சிகரெட்டுகளை விளம்பரப்படுத்துவதற்கான தடையை ஆன்லைன் ஊடகங்களுக்கும் நீட்டிப்பது அவசியம் என்றும் சுவையூட்டப்பட்ட சிகரெட்டுகள் (flavoured cigarette) மற்றும் இ-சிகரெட்டுகள் (e-cigarettes) போன்ற ஒத்த தயாரிப்புகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"சில நாடுகளில் முன்னேற்றம் இருந்தபோதிலும், புகையிலை தொழில் (tobacco industry) மற்றும் அரசியல் காரணங்களால், உலகளாவிய புகையிலை கட்டுப்பாடு குறித்த அறிவுக்கும் செயலுக்கும் இடையில் ஒரு நீண்ட மற்றும் தொடர்ச்சியான இடைவெளி ஏற்பட்டுள்ளது".

ARUNACHALAM