28 மனைவிகள் முன்னிலையில் 37 வது திருமணம் செய்த முதியவர்

SOCIAL SHARE
Pin It

ராஜாக்களுக்கு அதிகமான மனைவிகள் இருந்தார்கள், அவர்களுக்கு அதிகமான குழந்தைகள் இருந்தார்கள் என்று எல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் உண்மையில் ஒருவர்  தனது 37 வது திருமணத்தை நடத்தியிருக்கிறார். அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் இந்த திருமணத்தை அவர் செய்துள்ளார்.

இது குறித்து ரூபர் சர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் முதியவர் ஒருவருக்கு இளம் பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. அந்த வீடியோ பதிவிடும் போது அவர் அதில் "தைரியமான மனிதர், 37வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருமணம் எங்கு நடந்தது? இந்த திருமணத்தை செய்தது யார்? இதில் குறிப்பிட்டிருப்பது உண்மை தானா என்ற விபரங்கள் தெரியவில்லை. ஐபிஎஸ் அதிகாரி இந்த வீடியோவை ஷேர் செய்து இவ்வாறுகுறிப்பிட்டதால் இது உண்மை என பலர் நம்புகின்றனர்.

ARUNACHALAM