ஓட்டுநர் உரிமம் - மார்ச் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு

SOCIAL SHARE
Pin It

ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிப். 2020 முதல் காலாவதியாகும் சான்றிதழ்களுக்கு இது பொருந்தும் என அறக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுபிக்கவும் கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு, டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்றிதழ்கள், பெர்மிட்கள் ஆகியவை செல்லுபடியாகும் காலம் மார்ச் 31 வரை செல்லும் என கருத வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

முதலில் ஜூன் 30 வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்பு செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதற்கு பின் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மேலும் தற்போது மார்ச் மாதம் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதத்தில் இந்த கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ARUNACHALAM