தமிழர்களை சீண்டும் மார்க்கண்டேய கட்ஜூ

SOCIAL SHARE
Pin It

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தமிழை கிண்டலடித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். “தமிழ் மொழியை ஆதாம், ஏவாள் பேசினார்கள், செவ்வாய் கிரகத்தில் இருப்பவர்கள் கூட தமிழ் பேசுவார்கள்.” என்று கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அவ்வப்பபோது செய்திகளில் அடிபடுவது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜுவின் வழக்கம். அவ்வப்போது தமிழ் குறித்தும், தமிழர் குறித்தும் சீண்டல் கருத்துக்களை வெளியிடுவார்.  அந்த வகையில் சமீபத்தில் சில இந்தி பாடல்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தவர், அந்த பாடல்களை தமிழர்கள் மனப்பாடம் செய்து பாடினால், இந்தி மீதான விரோதப் போக்கு மறையும் என்று குறிப்பிட்டார்.

கிண்டலான அந்த பதிவுக்கு பலரும் சீரியஸாக அவரை விமர்சித்தனர். இதனால் கடுப்பான கட்ஜு, ஜோக்கை கூட புரிந்துகொள்ளாத அளவிற்கு தமிழர்கள் உள்ளார்கள். வளர வேண்டும் என்றார். அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில், மீண்டும் ஒரு கிண்டல் பதிவை போட்டுள்ளார். அதில், “இந்த பூமியில் பழமையான மொழி தமிழ். ஆதாம் - ஏவாளால் கூட பேசப்பட்டது. செவ்வாய் கிரகத்தில் வாழும் மக்களால் கூட பேசப்படுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நான் கேரள மக்களை நேசிக்கிறேன். அவர்களுடனான ஒரே பிரச்சனை என்னவென்றால், உடனுக்குடன் தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும் என்ற தீவிர முனைப்பு கொண்டவர்கள். ஒருமுறை நான் திருவனந்திபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்குச் சென்றபோது, அங்குள்ள பணியாளர்களுக்கு அரை டஜன் தொழிற்சங்கங்கள் இருப்பதைக் கண்டேன்.” என பதிவிட்டுள்ளார். தமிழர்களும், கேரளத்தவர்களும் அவருக்கு பதிலடி தந்து வருகின்றனர்.

ARUNACHALAM