சிலருக்கு உணவுகள் சாப்பிடும் போது குறிப்பிட்ட ஒரு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதாவது சரும அலர்ஜி, தடிப்பு, உடல் ஊறல் எடுப்பது, அங்கங்கு சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இதற்கு நாம் சாப்பிடும் உணவை உடல் நஞ்சாக புரிந்து கொள்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள். ஆகவே ரத்தத்தில் உள்ள நஞ்சை நீக்குவதன் மூலமாக இத்தகைய பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து ஒருசில வாரங்கள் இதனுடைய பாதிப்பை அதிகமாக உணர்வார்கள். அவற்றிலிருந்து நாம் ஓரிரு நாட்களில் விடுபட நமக்கு உதவக்கூடிய மூலிகைதான் வெற்றிலை மற்றும் மிளகு இந்த இரண்டையும் கசாயம் வைத்து குடிப்பதனால் இத்தகைய பிரச்சனையில் இருந்து நாம் இரண்டு நாட்களில் விடுபட வாய்ப்புண்டு.













