போதை ஏறினால் இங்கிலீஷில் பேசுகிறீர்களா? அதற்கான காரணம் என்ன?

SOCIAL SHARE
Pin It

சிலர் மது அருந்திய பின்னர் திடீரென ஆங்கிலத்தில் பேசத் தொடங்குவதை நீங்கள் பல திரைப்படங்களில் பார்த்திருக்க முடியும். அவர்கள் முழு நம்பிக்கையுடன் அச்சமின்றி ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார்கள். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் ஆங்கிலத்திலும் பதிலளிக்க விரும்புகிறார்கள்.

ஆனால், அது அவர்களது இயல்பான குணாதிசயமாக இருக்காது. இது ஏன் நடக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உண்மையில், இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. இந்த கேள்விக்கான பதில் ஒரு ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்துள்ளது.  

'ஜர்னல் ஆஃப் சைக்கோஃபார்மகாலஜி' ('Journal of Psychopharmacology') என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 1-2 பெக் ஆல்கஹால் எடுத்துக் கொண்ட பிறகு சிலரின் பதட்டம் குறைந்துவிடுகிறது. அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து பிற மொழியில் பேசத் தொடங்குகிறார்கள்.

வழக்கமாக அந்த மொழியில் பேச அவர்களுக்கு தயக்கம் இருந்திருக்கும். இந்தியாவை பொருத்த வரையில் மது அருந்திய பலரும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் படி, ஆல்கஹால் குடிப்பது மக்களின் நினைவகத்தையும் (Concentration Power) செறிவு சக்தியையும் பாதிக்கிறது. இந்த நேரத்தில், சிலரின் ஆளுமை (Personality) முற்றிலும் மாறுகிறது மற்றும் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். இது நடந்தவுடன், அவர்களின் ஆழ்மனது இதுவரை நம்பிக்கை குறைவாக இருந்த விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்குகிறது. அவர்கள் தங்கள் உணர்வுடன் இருக்கும்போது செய்யத் தயங்குபவற்றை, குடிபோதையில் அச்சமின்றி செய்கிறார்கள்.

வேறொரு மொழியைப் பேசுவதைத் தவிர, மது அருந்திய பிறகு வேறு விஷயங்களைச் செய்யத் தொடங்குகிறார்கள். சாதாரண நேரத்தில் நடனம் ஆடுவது அல்லது பாடவோ தயங்கும் மக்கள், மது அருந்திய பிறகு, அதிக நம்பிக்கையுடன் அதை செய்கின்றனர். தயக்கத்தை உடைத்தெறிந்து மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்கிறார்கள்.  

இனிமேல் யாராவது மது அருந்திய பிறகு ஆங்கிலம் பேசினாலோ அல்லது வித்தியாசமாக ஏதாவது செய்தாலோ அவரை கேலியும், கிண்டலும் செய்யவேண்டாம். பாவம் அது அவர்களின் உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கான உளவியல் ரீதியிலான செயல்பாடுகள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.  

ARUNACHALAM