சுனாமியைப் போல எழுந்திருக்கும் கொரோனா இரண்டாவது அலை இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்புகளை முடக்கும் நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. உடனடியாகச் சிகிச்சை தேவைப்படுவோர் எதையாவது செய்து உயிர் பிழைத்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.
வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொரோனவை விரட்ட உதவுவதாக கூறப்படும் டிப்ஸ்கள் அதிவேகத்தில் பரவி வருகின்றன. வீட்டு வைத்தியம் முதல் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகள் மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ ஆலோசனைகள் வரை எளிமையாக இருப்பதாக கூறி சில நேரங்களில் வைரலாகியும் விடுகின்றன.
இப்படி சமூகவலைத்தளங்களில் வரும் ஆலோசனைகளை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து சரிபார்த்து கொள்ளாமல் பலரும் தங்களது வீடுகளில் பின்பற்ற துவங்கி விடுகின்றனர். இவை சில நேரங்களில் ஆபத்தாக கூட முடிகின்றன. வெறும் 2 - 3 சொட்டு எலுமிச்சை சாற்றை மூக்கில் விடுவதன் மூலம் கொரோனா வைரஸை உடலில் இருந்து அகற்ற முடியும் என்று ஒரு வீடியோ போஸ்ட் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
வீடியோவில் பேசிய நபர் 'எலுமிச்சை சிகிச்சை' ('lemon therapy')ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆபத்தான கொரோனா வைரஸிலிருந்து அவர்களை காப்பாற்றும் என குறிப்பிட்டார். மேலும் 2 சொட்டு எலுமிச்சை சாறை எடுத்து மூக்கிற்குள் விடுமாறும் அறிவுறுத்தினார். இப்படி செய்வதன் மூலம் கண், காது, மூக்கு மற்றும் இதயம் உள்ளிட்ட அனைத்து முக்கிய உறுப்புகளும் வெறும் ஐந்தே வினாடிகளில் சுத்திகரிக்கப்படும். தவிர இது அனைத்து சளி, இருமல் நோய்களை எதிர்கொள்பவர்களுக்கு இந்த முறை நிவாரணம் அளிக்கும் என்று அந்த நபர் வீடியோவில் கூறுகிறார்.
மூக்கில் எலுமிச்சை சாறு விடுவதன் மூலம் கோவிட்-19 ஐ அழிக்க முடியும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை" என PIB தெரிவித்துள்ளது.
Aspidosperma Q 20 எனப்படும் ஹோமியோ மருந்தை மாற்றாக எடுத்துக் கொள்ளலாம் என்று சமீபத்தில் ஒரு போஸ்ட் வைரலானது. ஆனால் ஆயுஷ் அமைச்சகம் இந்த தகவலை நிராகரித்ததுடன், ஆபத்தான நிலையில் சுய மருந்து செய்ய வேண்டாம் என்று மக்களை எச்சரித்தது. அதே நேரத்தில் ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் பாதிக்கப்பட்டவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது சிகிச்சை தரும் மருத்துவரின் முடிவாகும்" என்று கூறியது.
இதனிடையே, மூக்கில் எலுமிச்சை சாறு விட்ட நபர் உயிரிழந்தார் என்பது கூடுதல் செய்தியாகும்.













