நாட்டில் உள்ள அனைவருக்கும் ஹெல்த் ஐடி கார்டு - தேசிய ஹெல்த் மிஷன் திட்டம் அறிமுகம்

SOCIAL SHARE
Pin It

பாரத தேசத்தின் மக்களை பேணிக்காக்கும் பொருட்டு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் எனும் திட்டத்தை பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இன்று துவக்கி வைத்தார். இதற்கான அறிவிப்பை சுதந்திர தின உரையில் அவர் வெளியிட்டார்.

இன்று முதல் நமது நாடு தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனை நோக்கி செல்ல உள்ளது. இந்தியாவின் சுகாதாரத் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகும் இந்த தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷனை நான் இன்று துவக்கி வைக்கிறேன். மருத்துவத் துறையில் இது புரட்சிகர திட்டமாகும்.

மருத்துவ அட்டை பலன் தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியர்களும் சுகாதார அடையாள அட்டைகளை பெறுவார்கள். ஒவ்வொரு முறை, மருத்துவரையோ, அல்லது மருந்தகங்களையோ நீங்கள் அணுகும்போது, பதிவு செய்யப்படும் அனைத்து விவரங்களும், இந்த சுகாதார அட்டையில் பதிவேற்றமாகிவிடும். நாட்டின் எந்த மருத்துவமனை அல்லது மெடிக்கலை நீங்கள் அணுகினாலும், அனைத்து விவரமும் இதில் பதிவாகும். டாக்டர் அப்பாயின்மென்ட், மருந்து குறிப்பு உள்ளிட்ட எல்லா விவரமும் இதில் இருக்கும். அவசர காலத்தில் எளிதாக அனைத்து மருத்துவ விவரங்களையும், மருத்துவர்கள் அறிந்து கொள்ள இந்த அட்டை உதவும்.


 

ARUNACHALAM