மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு . நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த திட்டத்தின்படி சாலையோர வியாபாரிகளுக்கு ரூ 10000 கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகள்.
வியாபாரிகள் வசிக்கும் பகுதியில் உள்ள பஞ்சாயத்து அல்லது மாநகராட்சிக்கு சென்று தனது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பித்து அந்தப்பகுதியில் வியாபாரம் செய்வதற்கான சான்றிதழை முதலில் பெறவேண்டும் !
பிறகு ஆதார் அட்டை , குடும்ப அட்டை , பஞ்சாயத்து or மாநகராட்சி அளித்த அட்டை இம்மூன்றையும் இணைத்து இணையத்தில் இதற்கான சிறுவியாபாரிகள் கடன் திட்டத்தளத்தில் ( Portal ) இதை பதிவேற்றம் செய்யவேண்டும் !
பதிவேற்றம் செய்யும்போது நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களோ அந்த வங்கியை விரும்பும் வங்கி ( Preferred Bank ) என்ற இடத்தில் பூர்த்தி செய்யவேண்டும் !
அவ்வாறு பூர்த்தி செய்துவிட்டால் ஒரு வாரத்திற்குள் அந்த வங்கியின் மூலமாக ரூபாய் 10,000 / - உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும் . இந்தக்கடனுக்கு 08 % வட்டி எனினும் 07 % வட்டியை மத்திய அரசு மானியமாக வழங்கும் !
இதை மாதம் 1000 / - வீதம் 10 மாதத்திற்குள் சரியாக திருப்பிச் செலுத்த வேண்டும்.













