பெண் நீதிபதிக்கு காண்டம் அனுப்பி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வரும் பெண் நீதிபதி புஷ்பா கனேதிவாலா, தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியை சில்மிஷம் செய்வது போக்சோ சட்டப்படி குற்றமில்லை என தீர்ப்பளித்தார்,.
5 வயது சிறுமி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்தவர், சிறுமியின் கையை பிடித்திருப்பதோ, பேண்ட் ஜிப் திறந்திருப்பதோ பாலியல் வன்முறை ஆகாது என கூறி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தார்.
இந்த சர்ச்சை தீர்ப்புகளுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இவரது பதவிகாலத்தை குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. .இந்நிலையில் தேவஸ்ரீ திரிவேதி என்ற பெண், சர்ச்சைக்குரிய தீர்ப்பு அளித்த அந்த பெண் நீதிபதிக்கு 100-க்கும் மேற்பட்ட காண்டம்களை பார்சலில் அனுப்பி வைத்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி வலைத்தளங்களில் வைரலாகவே பலர் ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
பெண் நீதிபதி சில சர்ச்சை தீர்ப்புகளை கொடுத்திருப்பார் அதற்காக அவரை அவமதிப்பது தவறு என்றும், இதைவிட நல்ல பரிசு தரமுடியாது, ஆனால் நீதிமன்றங்கள் அந்த பெண்ணுக்கு தண்டனை கொடுக்கும் என்றும் பதிவிட்டுள்ளனர்.













