அமெரிக்காவில் விசா கட்டுப்பாடுகள் தளர்வு

SOCIAL SHARE
Pin It

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றதையடுத்து எச்1-பி விசா கட்டுப்பாடுகளை தளர்த்தி நிரந்தர அமெரிக்க குடியுரிமை வழங்க மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை எளிதாக்கி வருகிறார்.

இது அமெரிக்க குடியேறிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. ஜோ பைடனின் மூதாதையர் அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர். மூன்று தலைமுறையாக அமெரிக்காவில் வசித்துவரும் பைடன் குடும்பம் எப்போதும் குடியேறிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. இதனாலேயே ஜனநாயக கட்சி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு ஜோ பைடன் கடந்த 50 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார்.

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி பணிசெய்து வரும் ஒப்பந்த பணியாளர்கள் முதல் சுயதொழில் முனைவோர்வரை அனைவருக்கும் முந்தைய டொனால்ட் டிரம்ப் அரசு அதிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே..!' என்ற கொள்கை கொண்ட குடியரசுக் கட்சி ஆசியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்க அதிக கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது ஜோ பைடன் ஆட்சியில் முந்தைய டிரம்ப் ஆட்சியில் நிரந்தர குடியுரிமைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இதனால் அமெரிக்காவில் வசித்துவரும் இந்தியர்கள், சீனர்கள், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ஜோ பைடனின் இந்த முயற்சிக்கு அமெரிக்க சிறுபான்மையினர் அதிக வரவேற்பை அளித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் குறைந்துள்ளதால் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் விசா கட்டுப்பாடுகளை ஜோ பைடன் வழங்குவதாக அறிவித்துள்ளார். அதீத விசா கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்கத் தொழில்துறை மந்தம் அடைவதாக ஏற்கனவே கலிபோர்னியா நீதிமன்றம் முன்னதாகக் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM