இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பேஸ்புக் இன்க், கூகிள் மற்றும் ஃபிண்டெக் நிறுவனமான இன்ஃபீபீம் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய டிஜிட்டல் கட்டண வலையமைப்பை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு, இந்தியாவின் மத்திய வங்கி புதிய அமைப்பு நிறுவனங்களை (NUE-கள்) உருவாக்குமாறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதன் மூலம் ஒரு கட்டண வலையமைப்பை உருவாக்கி, இந்திய தேசிய கொடுப்பனவு கவுன்சிலால் (NPCI) இயக்கப்படும் அமைப்புக்கு ஆரோக்கியமான போட்டியை உருவாக்க திட்டம் உருவாகியது.
2008 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட NPCI ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இது மார்ச் 2019 நிலவரப்படி வங்கிகளை அதன் பங்குதாரர்களாக்கியுள்ளது. இதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), Citibank மற்றும் HSBC ஆகியவை அடங்கும். இது வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிமாற்றங்கள், ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் கட்டணங்கள் உள்ளிட்ட சேவைகளின் மூலம் தினமும் பில்லியன் கணக்கான டாலர்களின் பரிமாற்றங்களை செய்கிறது.
இன்ஃபீபீமின் செய்தித் தொடர்பாளர் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த செயல்முறையின் இரகசியத்தன்மைக்கு நிறுவனம் கட்டுப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், ரிலையன்ஸ், கூகிள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் இது குறித்த கேள்விகளுகக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.













