உலக சாம்பியன் தடகள வீரரும், பிங்காதோனின் நட்சத்திர ஓட்டப்பந்தய வீராங்கனையுமான, 105 வயது நிரம்பிய மன் கவுருடன் மிலிந்த் சோமன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் தனது 93 வயதில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு 105 வயதிலும் அசராமல் ஓடுகிறார் என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
நடிகர் மிலிந்த் சோமன், உடற்பயிற்சி, ஓட்டப்பந்தயம், உடல் ஆரோக்கியம் என அனைத்தையும் பேணிக் காப்பதுடன், அடுத்தவர்களுக்கும் உதாரணமாக இருந்து வருகிறார். இதனாலேயே அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின்பற்றி வருகிறார்கள். இவர் தான், இந்தியாவில் பெண்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய பிங்காதான் ஓட்டப்போட்டியை கொண்டு வந்தவர்.
சுறுசுறுப்பான வாழ்க்கை 45 வயதில் முடிந்துவிடுகிறது என சிலர் கூறுகிறார்கள். அந்த வயதுக்கு மேல் தங்களால் எதுவும் செய்ய முடியாது என ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் இந்த பாட்டியின் கதையே வேறு. 93 வயதில் ஓட்டப் பந்தய போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்து, தற்போது அவரது 105வது வயது வரையிலும் ஓடிக் கொண்டிருக்கிறார். அவர் வசம் பல உலக சாதனைகள் உள்ளது. இவருக்கு உயரிய விருதான ‘நரி சக்தி புரஷ்கார்’ விருதை வழங்கி ஜனாதிபதி கவுரவித்திருக்கிறார்.













