வட கொரியா அரசு நாடு முழுவதிலும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இங்கு ஆளும் தொழிலாளர் கட்சியும் பள்ளிகளில் ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. ஆபாச படங்களை தயாரிப்பதில் ஈடுபடும் நபர்கள், அல்லது அதை வாங்கி விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு மரண தண்டனை தண்டனை கூட விதிக்கப்படுகிறது.
நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ஆபாச படத்தைப் பார்ப்பதால், சமூக சீரழிவு ஏற்படும் என கருதுகிறார். இந்நிலையில், பள்ளியில் படிக்கும் சிறுவன் ஒருவன் ஆபாசப் படத்தைப் பார்த்ததை அறிந்த கிம் ஜாங் உன், சிறுவனுக்கு மட்டுமல்ல, குடும்பம் முழுவதிற்கும் கடுமையான தண்டனையை வழங்கினார்.
வட கொரியா காவல்துறையினர் கணினியின் IP முகவரியைக் கண்டுபிடித்து, ஆபாச படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சிறுவனை கையும் களவுமாக பிடித்தனர்.
ஆபாச படத்தைப் பார்த்ததற்கான தண்டனையாக, சிறுவனையும் அவனது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.
சிறுவன் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும் தப்பிக்கவில்லை. வட கொரியா விதிகளின்படி, பள்ளி குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரும் அதற்கு பொறுப்பேற்கிறார். இந்த வழக்கில், ஆசிரியர் தனது பொறுப்பை நிறைவேற்றுவதில் தவறிவிட்டதாக கூறி, அவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.













