உளவு பார்ப்பதை விட நிறுவனத்தை மூடுவது நல்லது - எலான் மாஸ்க்!

SOCIAL SHARE
Pin It

தனது நிறுவன கார்களை யாராவது உளவு பார்க்க பயன்படுத்தினால், தனது நிறுவனம் மூடப்படும் என டெஸ்லா இன்க் தலைமை நிர்வாகி எலன் மஸ்க் கூறியுள்ளார். ”உளவு பார்த்து தொழில் செய்வதை விட, நான் என் நிறுவனத்தை மூடி விடுவதை மேலாகக் கருதுவேன்” என்று எலன் மஸ்க் கூறினார்.

"எந்தவொரு தகவலையும் நாங்கள் மிகவும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்” என்று மஸ்க் வர்சுவல் சந்திப்பில் கலந்துரையாடிய போது ஒரு சீன மன்றத்தின் முன் கூறினார்.

வாகனங்களில் நிறுவப்பட்ட கேமராக்கள் குறித்த பாதுகாப்புகளை சுட்டிக்காட்டி, சீன இராணுவம் டெஸ்லா கார்களை அதன் வளாகங்களுக்குள் நுழைய தடை விதித்தது.

சீனாவின் இராணுவம் டெஸ்லாஸை தடை செய்துள்ளதாக வந்த செய்திகளுக்கு பதில் அளிக்கையில், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையில் அதிக பரஸ்பர நம்பிக்கை இருக்க வெண்டும் என்று மஸ்க் வலியுறுத்தினார். மாநில கவுன்சிலின் கீழ் ஒரு அறக்கட்டளையால் நடத்தப்படும் சீனா மேம்பாட்டு மன்றத்தில் நடந்த ஒரு உயர்மட்ட வர்த்தக கூட்டத்தில், உளவு பார்த்து தொழில் செய்வதை விட, நான் என் நிறுவனத்தை மூடி விடுவதை மேலாகக் கருதுவேன் என எலன் மஸ்க் கூறினார்.  

 

ARUNACHALAM