இந்திய சிறுவனின் கண்டுபிடிப்பு வைரல்

SOCIAL SHARE
Pin It

இங்கிலாந்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று வால்செல். இது 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடலடியில் இருந்ததாக பழம்பொருள் ஆராய்ச்சி புவியியல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

இங்கு பழம் பொருள் ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது புதையுண்ட  பொருட்களை கண்டெடுப்பது உண்டு. தற்போது இந்திய பூர்வீகம் கொண்ட ஒரு சிறுவன் விலங்கின் கொம்பு போன்ற ஒரு தொன்மையான பொருளைக் கண்டுபிடித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சித்தார்த் சிங் ஜமாத் என்றார் பரம்பொருள் ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட 6 வயது சிறுவன். வால்செல் பகுதியில் பழங்காலத்து விலங்கு கொம்பை தனது தந்தையுடன் சேர்ந்து கண்டுபிடித்துள்ளான். புழுக்களை தேடி ஈரமண்ணில் தான் குழி தோண்டியபோது இந்த கொம்பு தென்பட்டதாக அவன் கூறியுள்ளான்.

இவனது தந்தை விஷ் சிங் பழம்பொருள் ஆராய்ச்சி நிபுணர். 251 முதல் 458 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விலங்கின் கொம்பு இது என அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வு பிரிவுக்கு தனது மகனின் கண்டுபிடிப்பை அனுப்பி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது வைரல் ஆகியுள்ளது.

ARUNACHALAM