எல்லையில் வீரர்கள் வாபஸ்

SOCIAL SHARE
Pin It

எல்லைப் பிரச்னை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன், கடந்த ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது.

தொடர்ந்து நடத்தப்பட்ட இருதரப்பு பேச்சுகளில், சுமூக தீர்வு எட்டப்பட்டதை அடுத்து, லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பாங்காங் சோ ஏரிக் கரையில் இருந்து மட்டும், இருதரப்பு ராணுவ வீரர்களும், 'வாபஸ்' பெறப்பட்டனர்.

மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது : கிழக்கு லடாக்கின் இதர பகுதிகளில் இருந்து, இருதரப்பு ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவது குறித்து, சீனா தரப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். இதில் ஒருமித்த முடிவை எட்டுவதற்கான முயற்சியில், இருதரப்பு ராணுவம் மற்றும் துாதரக அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து ராணுவ வீரர்களை விரைவில் திரும்பப் பெறப்படவேண்டும்.அந்த பணிகளை விரைவில் நிறைவு செய்ய, சீன தரப்பு, எங்களுடன் இணைந்து பணியாற்றும் என நம்புகிறோம் என அவர் கூறினார்.

ARUNACHALAM