செயற்கை நுண்ணறிவு - 3

SOCIAL SHARE
Pin It

தற்போதுமடிக்கணினியும் கைபேசியும் நம்முடைய அன்றாட பயன்பாட்டின் தவிர்க்கமுடியாத ஒருகருவியாக மாறிவிட்டன ஆயினும் கைகால்களை அசைக்கமுடியாதவர்களால் இவைகளை பயன்படுத்தி கொள்ளமுடியாது அதனை வெற்றி கொள்ள BrainGate எனும் ஆய்வு அமைப்பானது மனித மூளை, கணினி ஆகிய இரண்டிற்குமிடையேயான இடைமுகத்தை (brain-computer interface (BCI))என்ற செயல்முறையை பயன்படுத்தி கைகால்கள் செயல்படமுடியாமல் இருப்பவர்களால்கூட மடிக்கணினி சாதனத்தின் இடம்சுட்டியை நகர்த்துவது சொடுக்குதல் செய்வது ஆகிய செயல்களை மனித மூளையில்அவ்வாறான கட்டளைகளை சிந்திப்பதன் வாயிலாகவே செயற்படுத்திடமுடியும் என கண்டறிந்துள்ளனர்

மேலும் கைகால்கள் செயல்படமுடியாமல் இருப்பவர்களை மடிக்கணினி சாதனத்தின் வாயிலாக மனித மூளை, கணினி ஆகிய இரண்டிற்கும் இடையேயான இடைமுகத்தை இயலுமை செய்திடலாம் எனபிரவுன் பல்கலைகழக ஆய்வறிக்கைஒன்று கூறுகின்றதுஇந்த ஆய்வில் investigational BrainGate BCI என்ற செயல்முறையை பயன்படுத்தி கார்ட்டெக்ஸில் வைக்கப்பட்டுள்ள மோட்டாருடன் சிறிய சென்சார் மூலம் நேரடியாகச் செயல்படும் நரம்பியல் செயல்பாடு, பொதுவாக பயன்படுத்தப்படும் டேப்லெட் நிரல்களால் கைகளால் சுட்டியை சொடுக்குவதை போன்றேநம்முடையமனித மூளையின் சிந்தனையில் எழும் கட்டளைகளின் துனையுடன் செயல்படச்செய்து குடும்ப உறுப்பினர்களுடனும் நண்பர்களுடனும் இணையத்தின் வாயிலாக நேரடியாக குழுவிவாதம் செய்திடவும் மின்னஞ்சல்களை கையாளுதல் இசைகச்சேரிகளை கேட்டல் கானொளி காட்சிகளை காணுதல் இணையத்தின் வாயிலாக பொருட்களை கொள்முதல்செய்தல் ஆகியபல்வேறு பணிகளை மடிக்கணினியின் பயன்பாடுகளின் மூன்று மாதிரி செயல்திட்டங்களின் வாயிலாக செயல்படுத்தி

பரிசோதித்து ள்ளனர் மேலும் Bluetooth வாயிலாக கம்பியில்லாத சுட்டியை கையாளவும் முடியும் என கண்டறிந்துள்ளனர்
இதனை கடந்த 21 நவம்பர் 2018இல் PLOS ONE எனும் ஆய்விதழில் வெளியிட்டுள்ளன .மேலும் விவரங்களை கானொளி காட்சியாக காண https://www.youtube.com/watch?time_continue=47&v=O6Qw3EDBPhg எனும் இணையமுகவரிக்கு செல்க

ARUNACHALAM