பேஸ்புக் ப்ரெண்ட் - இக்னோர் செய்தவருக்கு கொலை மிரட்டல்

SOCIAL SHARE
Pin It

அண்மை காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு தீய செயல்கள் அரங்கேறி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துகள் மற்றும்  மோதல்களை கண்காணிப்பதற்கென தனியாக தொழில்நுட்ப கண்காணிப்பு குழு இயங்கி வருகிறது.

இந்நிலையில் பேஸ்புக்கில் ப்ரெண்ட் ரிக்வெஸ்டை இக்னோர் செய்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டகோடா என்ற பகுதியை சேர்ந்த கலீப் பர்க்சீக். இவர் தான் பணியாற்றும்  நிறுவனத்தின் முதலாளி வில்லிஸ்டனுக்கு பேஸ்புக் ரெக்யூஸ்ட் அனுப்பினார். ஆனால் அதனை அவர் இக்னோர் செய்து விட்டார். இதனால் ஆத்திரமுற்ற கலீப், முதலாளிக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். இதில்: "என்னுடைய வேண்டுதலை ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையேல் நான் உங்களை கொலை செய்வேன்" என எச்சரித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவன முதலாளி கலீப் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அந்நபரை கைது செய்தனர்.

 

ARUNACHALAM