தாஜ்மஹாலின் வடிவமைப்பையும், அதன் கட்டடக் கலையையும் கண்டு மயங்காதவர்கள் யாருமில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல. மயங்கி விட்டது.
நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ள, மைக்ரோசாப்டின், இந்திய மேம்பாட்டு மையத்தின் கட்டடக்கலை, தாஜ்மஹாலின் அழகால் ஈர்க்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட, 90 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த மையம், உள்ளூர் கைவினைஞர்களின் நுட்பமான கலைப்படைப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியங்களை, கிராபிக்ஸ் கைவண்ணத்தில் இங்கே காணலாம்.
இந்தியாவில், மைக்ரோசாப்டின், மூன்றாவது மேம்பாட்டு மையமாகும் இது. மற்ற இரண்டும் பெங்களூரிலும், ஹைதராபாதிலும் அமைந்து உள்ளன.













