ZOOM அழைப்பில் நடந்த வழக்கு விசாரணை - பெண்ணிடம் அத்துமீறிய வழக்கறிஞர்

SOCIAL SHARE
Pin It

ஜூம் செயலி வழியாக நடந்த நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது, வீடியோவை அணைக்காமல், வழக்கறிஞர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் வைரலாகி வருகிறது..!

கொரோனா பரவலுக்கு பின், வேலை, படிப்பு, மீட்டிங் என அனைத்தும் ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. மிகவும் பயனுள்ள இந்த தொழில்நுட்பம், சிலரின் அஜாக்கிரதையால், பெரும் சர்ச்சையும் உருவாக்க தவறவில்லை.

பெரு நாட்டில் நடந்த ஒரு சம்பவம், சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே பெரும் அவமானமாக மாறி உள்ளது. பெருவில், ஜூம் செயலி வழியாக நடந்த நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையில் தனது தரப்பு வாதம் முடிந்தததும், வக்கீல் லாஸ் டி சஞ்சாமயோ தனது வீடியோவை ஆப் செய்ய மறந்து விட்டார்.

பின் தனது அறையில், பெண் ஒருவருடன் உடலுறவு வைத்து கொண்டார். கேமராவை அணைக்காமல், அது விர்ச்சுவல் மீட்டிங் மற்றும் TV-யில் நேரலையாக ஒளிபரப்பானது. இதனால் நீதிபதி உள்ளிட்ட அனைவரும் கடும் அதிருப்தி அடைந்தனர். மொபைலில் தொடர்பு கொள்ள முயன்ற போதும், அவர் சைலன்டில் போட்டிருந்ததால், செய்வதறியாமல் திகைத்தனர். இதனால் உடனடியாக, வழக்கு விசாரணையை நீதிபதி முடித்து கொண்டார். இதனையடுத்து அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

கோர்ட்டின் புனிதத்தையும், வக்கீல் தொழிலின் கண்ணியம் மற்றும் மரியாதையையும் சஞ்சாமயோ கெடுத்துவிட்டதாக நீதிபதி குற்றம்சாட்டினார். அவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சஞ்சாமயோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பார் கவுன்சிலும் அறிவித்துள்ளது. நாட்டிற்கே களங்கம் விளைவித்ததாக, பெரு அரசும் விசாரணையை துவக்கி உள்ளது. அவர் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண், அவரிடம் வழக்கு ஒன்றிற்காக வந்தவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

ARUNACHALAM