சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள பெருங்களத்துாரில், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, 206 கோடி ரூபாயில், புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் புறநகர் பகுதி வாகனங்கள், சென்னை நகருக்குள் நுழையும் இடமாக, பெருங்களத்துார் உள்ளது.தொழில் வளர்ச்சி மற்றும் ஐ.டி., நிறுவனங்களால், பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்தபடி உள்ளது.கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம், ஜி.எஸ்.டி., சாலை ஆகியவற்றில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், புறநகர் பஸ்கள் மற்றும் ஆம்னி பஸ்கள் நின்று செல்லவும், பெருங்களத்துாரில், தனியாக நிறுத்தம் உருவாக்கப்பட்டது.
அதன்பின், இரும்புலியூர் பாலம் முதல் வண்டலுார் வரை, வெளியூர் செல்லும் ஆம்னி மற்றும் அரசு பஸ்கள் அணிவகுத்து நிற்பதால், ஜி.எஸ்.டி., சாலையில், நெரிசலுடன் சேர்த்து, விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.இதை தடுக்க, பெருங்களத்துார் சந்திப்பில், புதிய மேம்பாலம் கட்ட, முதல்வர் இ.பி.எஸ்., 2019ல் அடிக்கல் நாட்டினார்.பணிகள் துவங்கி நடந்து வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பின், மீண்டும் பணிகள் வேகம் எடுத்துஉள்ளன.இது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:தாம்பரம் ரயில்வே மேம்பாலம் போல் இல்லாமல், 'ஓவல்' வடிவில், இந்த மேம்பாலம் அமைய உள்ளது.
மொத்தம், 206 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பணிகள் நடக்கின்றன.திட்டப்படி, புதுபெருங்களத்துார் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டு உள்ள, மேம்பால பணிகளும், இதனுடன் சேர்த்து முடிக்கப்பட உள்ளன.இதற்கான, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ள நிலையில், அந்த பகுதியில் கட்டுமான பணிகள் துவங்கி உள்ளன.சென்னையை பொறுத்தவரை, வட்டவடிவிலான மேம்பாலங்கள், பல இடங்களில் கட்டப்பட்டுள்ளன; ஓவல் வடிவிலான மேம்பாலம் கட்டப்படுவது, இதுவே முதல் முறையாகும்.
அடுத்தாண்டு டிசம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. பிரமாண்ட மேம்பால மொத்த நீளம் - 2.7 கி.மீ.,பாலத்தின் மையபகுதி சுற்றளவு - 1,084 அடிதாம்பரம் - செங்கல்பட்டு மார்க நீளம் - 2,952 அடிஅகலம் - 24 அடிசெங்கல்பட்டு - தாம்பரம் மார்க நீளம் - 1,640 அடிஅகலம் - 24 அடிநெடுங்குன்றம் மார்க நீளம் - 1,049 அடிஅகலம் - 45 அடி பீர்க்கன்காரணை மார்க நீளம் - 1,476 அடிஅகலம் - 36 அடிதிட்ட செலவு - ரூ.206 கோடிபோக்குவரத்து எப்படி அமையும்?தாம்பரத்தில் இருந்து...பாலம், ‛ஓவல்' வடிவில் அமைவதால், தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள், செங்கல்பட்டு செல்ல, மேம்பாலத்தில் ஏறி, நேரடியாக ஜி.எஸ்.டி., சாலையில் கீழே இறங்கலாம்.













