உடலுறவின்போது துணையின் சம்மதம் இல்லாமல் திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுவது சட்டவிரோதம் என்றும் அது பாலியல் பலாத்காரத்திற்கு சமம் என்றும் கலிபோர்னியாவில் புதிய சட்டம் வந்துள்ளது.
எதற்கெல்லாம் சட்டம் போடுவது என்றே இல்லாமல் போய்விட்டது. கலிபோர்னியாவில் ஆணுறையை அகற்றுவதற்கெல்லாம் ஒரு சட்டத்தை போட்டுள்ளார்கள்.
அந்த மசோதாவுக்கு பெயர் AB 453 ஆகும். இந்த புதிய வகை மசோதா வந்தால் அனுமதியின்றி, துணையின் சம்மதமின்றி ஆணுறையை அகற்றுவது சட்டப்படி குற்றமாகி சம்பந்தப்பட்ட நபர் மீது உடல் ரீதியான சேதம் ஏற்படுத்தியதாகவும் உணர்ச்சி ரீதியிலான சேதங்களை ஏற்படுத்தியதாகவும் ஒருவர் வழக்கு தொடர செய்து இழப்பீட்டை கேட்கலாம்.
இதை ஊக்குவிக்க முடியாது. இது தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் மூன்றில் ஒரு பெண்ணும் ஐந்தில் ஒரு ஆணும் இதில் உடலுறவின்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக புகார் தெரிவித்தார்கள். இப்போது கலிபோர்னியாவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது பாலியல் குற்றமாகவும் பார்க்கப்படுகிறது.













