தினம் ஒரு திருக்குறள்

SOCIAL SHARE
Pin It

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

மு.வ உரை:

முற்றுகையிட்டும் முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

முழுவதுமாகச் சூழ்ந்து கொண்டாலும் சூழாமல் வலு இழந்த இடத்தில் நெருங்கிப் போரிட்டாலும் உள்ளிருப்போரில் சிலரை ஐந்தாம் படை ஆக்கினாலும், பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதே அரண்.

Translation:

A fort should be impregnable to foes who gird it round,
Or aim there darts from far, or mine beneath the ground.

Explanation:

A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.

ARUNACHALAM