விண்வெளி நிலையத்துக்கு சீனா அனுப்பிய கருவி

SOCIAL SHARE
Pin It

சீனா தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு நிலையத்துக்கு தேவையான பல முக்கியமான கருவிகளை சீனா தற்போது வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.

விண்வெளியில் அமைத்து வரும் ஆய்வு நிலையத்துக்குத் தேவையான முக்கியமான கருவியை, சீனா வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையத்தை நிர்ணயித்துள்ளன. அதுபோல, விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையத்தை அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. ஆங்கில எழுத்தான, 'டி' வடிவில், இந்த ஆய்வு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

அதற்கு தேவையான முக்கியமான சாதனங்கள், கருவிகளை, சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. அந்த வகையில் மிகவும் முக்கியமான கருவி, ராக்கெட் வாயிலாக, அனுப்பி வைக்கப்பட்டது. ஹைனான் தீவில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட், திட்டமிட்டபடி, வெற்றிகரமாக, புவி வட்டப் பாதையை அடைந்தது. 'டியானே' என்ற இந்த கருவி, விண்வெளி ஆய்வு நிலையத்தின் நிர்வாக மற்றும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும்.

நாசா அமைப்பு கடந்த ஆண்டு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில் முதல்முறையாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் கடந்த வாரங்களில் இருமுறை இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தில் பறந்தது.
 

ARUNACHALAM