இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்:

SOCIAL SHARE
Pin It

திருவள்ளுர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2020-2021ம் நிதியாண்டிற்கு விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளி ஏழைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறியதாவது, சமூக நல அலுவலகத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:

1. வருமானச் சான்று ரூ.72,000க்குள் (வட்டாட்சியரிடம் பெற வேண்டும்).

2. இருப்பிடச் சான்று (வட்டாட்சியரிடம் பெற வேண்டும் அல்லது ரேஷன் கார்டு). 3. தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது) (6 மாத கால பயிற்சி).

4. வயது சான்று (20 முதல் 40 வயது வரை) (கல்வி சான்று அல்லது பிறப்புச் சான்று). 5. சாதிச் சான்று.

6. மனுதாரரின் கடவுச் சீட்டு கலர் புகைப்படம்-2. 7. ஆதார் அடையாள அட்டை.

8. விதவை கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல். மேற்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை 30.9.2020க்குள் சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டி முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம் 2ம் தளம், திருவள்ளுர் - 602001. தொலைபேசி எண். 044-29896049 மற்றும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ARUNACHALAM