அமெரிக்காவில் யோகா பயிற்சி மசோதா நிறுத்திவைப்பு

SOCIAL SHARE
Pin It

அமெரிக்காவின் அலபாமா மாகாண அரசு பள்ளிகளில், யோகா பயிற்சி வழங்குவதற்கான மசோதா, எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1993ல், ஹிந்து மதத்தின் அடையாளம் என கூறி, அமெரிக்காவின் அலபாமா அரசு பள்ளிகளில் யோகா கற்பிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அலபாமா குடியரசு கட்சி எம்.பி.,யும், யோகா பயிற்சியாளருமான ஜெரிமி கிரே, அரசு பள்ளிகளில் யோகா பயற்சி வழங்க வகை செய்யும் மசோதாவை, பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்தார்.

பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. ஆனால், சில அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக செனட் நீதித் துறை குழுவின் பரிசீலனைக்கு, மசோதா அனுப்பப்பட்டது.  இக்குழு, பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. அதில், 'ஈகில்' கூட்டமைப்பின் இயக்குனர் பெக்கி கெரிட்சன், மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

''வகுப்பறையில் யோகா பயிற்சியாளர்கள், மாணவர்களுக்கு ஆன்மிக முத்திரைகளை கற்றுக் கொடுப்பது, பெற்றோரின் சம்மதத்தை மீறிய செயல்,'' என, அவர் வாதிட்டார். இந்த எதிர்ப்பு காரணமாக, யோகா மசோதாவை செனட் சபைக்கு அனுப்புவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, நீதித் துறை குழு தெரிவித்துள்ளது.

ARUNACHALAM