எஸ்.பி.ஐ., ஆன்லைன் சேவை பாதிப்பு

SOCIAL SHARE
Pin It

பாரத ஸ்டேட் வங்கியின், 'ஆன்லைன்' சேவையில் சிக்கல் ஏற்பட்டதால், பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.

கடந்த, 2020 - 21ம் நிதியாண்டு முடிந்து, 2021 -- 22ம் புதிய நிதியாண்டு துவங்கியது. அனைத்து வர்த்தக நிறுவனங்களும், வங்கிகளும், தங்களின் புதிய நிதியாண்டுக்கான கணக்கை துவக்கின.இந்நிலையில், எஸ்.பி.ஐ., என்ற பாரத ஸ்டேட் வங்கியின் ஆன்லைன் சேவை, முழுதும் செயல்படவில்லை என, வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

புதிய நிதியாண்டு துவக்கம் என்பதால், நேற்று வங்கி சேவை இல்லை; ஆன்லைன் வாயிலாகவும் எந்த சேவையையும் மேற் கொள்ள முடியவில்லை. எஸ்.பி.ஐ.,யின், 'யோனோ' செயலி மற்றும் ஆன்லைன் வங்கி சேவையும் செயல்பட வில்லை. 'பேடிஎம், கூகுள் பே' போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் வாயிலாகவும், சேவைகளை மேற்கொள்ள முடிவில்லை.ஆன்லைன் வங்கி சேவையின் தரத்தை உயர்த்தும் வகையில், பராமரிப்பு பணி நடப்பதாக, இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து எந்த முன்னறிவிப்பும் செய்யப்படவில்லை. இதனால், பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். 

ARUNACHALAM