இரவில்தான் கொரோனா பரவுமா.. ஹர்பஜன் சிங் கேள்வி!

SOCIAL SHARE
Pin It

தலைநகர் டெல்லியின் கொரோனா நிலைமை மிகவும் மோசமடைந்துக் கொண்டே வருகிறது. கொரோனா நெறிமுறையை முழுமையாகப் பின்பற்றுமாறு பொதுமக்களை டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால்  பலர் விதிகளை சரியாக பின்பற்றவதில்லை.

டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இரவு ஊரடங்கு உத்தரவு இன்று முதல் பொருந்தும். ஊரடங்கு உத்தரவு நேரம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும். இந்த உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திலும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் பகல் நேரங்களில் வெளியே வர தடை உத்தரவு உள்ளிட்ட கடுமையான தடைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 30 வரையிலான இரவு ஊரடங்கு உத்தரவு நீடிக்கும்.

பகலில் ஊரடங்கு போடுவதில் ஏன் அரசுக்கு தயக்கம் என்ற ரீதியில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த கொரோனா வைரஸ் இரவு நேரத்தில் மட்டுமே தான் வரும்... பகல் நேரத்தில் வராது... இது ஒரு நல்ல முடிவு என இரவு ஊரடங்கை கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார்

 

ARUNACHALAM