ஒருபுறம், சீனா தனது நாட்டில் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதாகக் கூறிக் கொண்டிருக்கையில், மறுபுறம் இந்த நாட்டின் பிச்சைக்காரர்கள் நாளுக்கு நாள் நவீனமாகி வருகின்றனர். சீனாவின் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க இ-வாலட்டை பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய ஆச்சரியமாக உள்ளது இல்லையா. இதற்கு காரணம் சீனாவில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகம் பயன்படுத்துகிறார். அதனால், பிச்சைக்காரர்களுக்கு பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
சீனாவில் நடந்த டிஜிட்டல் புரட்சி காரணமாக இங்குள்ள பிச்சைக்காரர்களும் நவீனமாகிவிட்டனர். அந்த நாட்டில் பிச்சைக்காரர்கள் e-wallet பயன்படுத்தி, அதில தொகையை செலுத்துமாறு கோருகின்றனர். இதனால், பணம் இல்லை என யாரும் சாக்கு சொல்ல முடியாது என்பதால் அவர்கள், இந்த டிஜிட்டல் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர். சீனாவில் பிச்சைக்காரர்கள் கியூஆர் குறியீடு (QR Code) கொண்ட ஒரு அட்டையை வைத்துக் கொண்டு நகரத்தின் சுற்றுலா தலங்கள் அல்லது வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் நிற்பதை காணலாம். இதுபோன்ற இடங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் வருகிறார்கள். அவர்களிடன் பிச்சை எடுக்க அவர்கள் நவீன முறையை பின்பற்றி வருகிறார்கள்.













