மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் வரும் நினைவுச்சின்னங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தாஜ்மகாலை பொறுத்தவரை பிரதான குவிமாடத்தில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை அகற்றுதல், பிரதான வாயிலில் பதிக்கப்பட்டுள்ள பழைய கற்களை அகற்றி புதிய கற்களை பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. இதனால் தாஜ்மகால் புதுப்பொலிவுடன் மாறும் என தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைப்போல ஆக்ரா கோட்டையின் அமர்சிங் வாயில் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பதேபூர் சிக்ரியில் தோடர்மால் பரடாரி, முகலாயர் கால வளாகங்கள் அனைத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் கூறினர்.













