வயதான உணர்வு ஏற்பட்டுள்ளது: டோனி

SOCIAL SHARE
Pin It

மும்பை வான்கடே மைதானத்தில் 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது.  இதில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பீல்டிங்கிற்காக டோனி களமிறங்கியது 200வது போட்டியாகும்.  இதுவரை ஐ.பி.எல்.லில் 206 போட்டிகளை விளையாடியுள்ள டோனி, சென்னை அணிக்காக 176 ஐ.பி.எல். போட்டிகளிலும் மற்றும் 24 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
 
சென்னை அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியது பற்றி, போட்டி முடிந்ததும் பேட்டியளித்த டோனி, மிக வயதானவன் என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது.  இது ஒரு மிக நீண்ட பயணம்.  கடந்த 2008ம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியது.  தென்ஆப்பிரிக்கா, துபாய் மற்றும் திரும்ப இந்தியாவில் விளையாடினேன்.  200வது போட்டியை மும்பையில் விளையாடுவேன் என நினைக்கவில்லை என்று கூறினார்.

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்தது.  அடுத்து விளையாடிய சென்னை அணி, 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அடுத்த போட்டியை சென்னை அணி வருகிற திங்கட்கிழமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.

ARUNACHALAM