வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் அட்டையை புதுப்பிப்பதற்கான விதிகளை மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது; இதை அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரவேற்றுள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஓ.சி.ஐ. கார்டு வழங்குகிறது. இந்த கார்டு வைத்திருப்பவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு 'விசா' பெறத் தேவையில்லை. இந்த கார்டு வைத்துள்ளவர்கள் 20 வயது முடிந்ததும் ஒரு முறையும் 50 வயது முடிந்ததும் ஒரு முறையும் கார்டை புதுப்பிக்க வேண்டும்.
இதனால் 'பாஸ்போர்ட்'களை புதுப்பிக்கும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் புகார் செய்தனர். இந்நிலையில் 'ஓ.சி.ஐ. கார்டை 20 வயது பூர்த்தியான பின் புதுப்பித்தால் போதுமானது. அதன்பின் புதுப்பிக்க தேவையில்லை' என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதை அமெரிக்க வாழ் இந்தியர்கள் வரவேற்றுள்ளனர்.













