கொரோனாவால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ரத்து

SOCIAL SHARE
Pin It
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.35 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.56- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
 
வைரஸ்  பாதிப்புடன் 1.85- கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.09- லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனிடையே, ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். அதேபோல், பிலிப்பைன்ஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார். 

ஜப்பான் நாட்டில் நேற்று 4 ஆயிரத்து 342 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது. 
 
வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் டோக்கியோ, ஒசலா, ஹியோகோ மாகாணங்களில் அவசர நிலை பிறப்பித்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.
 

 

 

ARUNACHALAM