விமான பயணத்தில், தவறுதலாக கொதிக்கும் தேநீரை கொட்டியதால், பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது விமான நிறுவனம்.
டப்ளின் என்ற இடத்திலிருந்து இஸ்தான்புல்லிற்கு (Dublin to Istanbul) சென்ற விமானத்தில் பணியாளர் ஒருவர், அனைவருக்கு தேநீர் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, எம்ரே கரக்யா என்பவருக்கு தேநீர் வழங்கிய போது, அவரது கை தவறி, 13 வயது சிறுவன் காலில் தேநீர் கொட்டியது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதி 56 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடு வழங்குமாறு விமான நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்திய பண மதிப்பில் 58 லட்சம்.
2019 ஆம் ஆண்டில், மாண்ட்ரீல் ஒப்பந்தத்தில் உள்ள 17 வது பிரிவின் கீழ் விமானத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் அதற்கு விமான நிறுவனங்கள் தான் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் ஒன்று தெளிவுபடுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், பயணிகளின் தவறு காரணமாக காயம் ஏற்பட்டது என்பதை நிரூபிக்க முடிந்தால் மட்டுமே விமான நிறுவனங்கள் பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியும்.













