13 வயதில் கைது - 83வது வயதில் விடுதலை - அமெரிக்காவில் நடந்த விநோதம்

SOCIAL SHARE
Pin It

அமெரிக்காவின் நீண்ட சிறார் சிறை வாசி, அண்மையில் விடுவிக்கப்பட்டார். சுமார் 60 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார் அவர்.

செவிலியராகப் பணி புரிந்த தனது தாயாருடனும் மெக்கானிக்காக இருந்த தந்தையுடனும் தனது தம்பி, தங்கையுடனும் தெற்கு ஃபிலடெல்ஃபியாவிலிருந்து ஒரு தொழிலாளர் குடியிருப்புப் பகுதிக்குக் குடிபெயர்ந்தபோது லிகானுக்கு வயது 13.

1953ஆம் ஆண்டில், ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் அந்தச் சம்பவம் நடந்தது. லிகான் நெருக்கமில்லாத ஒரு சிலருடன் அவர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, மது அருந்தியிருந்த சிலர் மீது மோதிவிட, அங்கு தொடங்கியது சிக்கல். மது அருந்தப் பணம் கேட்ட விவகாரம் பெரிதாகியது.

அன்றிரவு ஏற்பட்ட கத்தித் குத்துச் சம்பவத்திலும் தொடர்ந்த வன்முறையிலும் இருவர் உயிரிழந்ததாகவும் ஆறு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

முதலில் கைது செய்யப்பட்டது லிகான் தான். வீட்டிலிருந்து தொலைவிலுள்ள ஒரு காவல் நிலையத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

சட்ட உதவி மறுக்கப்பட்டு, ஐந்து நாட்கள் அங்கு காவலில் வைக்கப்பட்டார். தன்னைப் பார்க்க வந்த தனது பெற்றோர் திருப்பியனுப்பப்பட்டனர். 13 வயதே ஆன அந்தச் சிறுவன், கொலைக்குற்றம் சாட்டப்பட்டான்.

“தான் யாரையும் கொலை செய்யவில்லை,“ என்பது லிகானின் வாதமாக இருந்தது.

குற்றவியல் விசாரணையை லிகான் எதிர்கொண்டார், அங்கு அவர் வழக்கின் உண்மைகளை ஒப்புக் கொண்டார், கொடூரமான இரண்டு கொலைகளைச் செய்ததாக அவர் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. பரோல் இல்லாத கட்டாய ஆயுள் தண்டனை அந்தச் சிறுவனுக்கு வழங்கப்பட்ட போது நீதிமன்றத்தில் அவன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது முன்னறிவிக்கப்பட்ட முடிவு என்பதால், இது வழக்கமான நடைமுறை தான். ஆனால் தனது தண்டனையின் முழு விவரங்களையும் அறியாமலேயே சிறைக்குச் சென்றான் அந்தச் சிறுவன்.

AE 4126 என்ற எண் கொண்ட கைதியாகச் சென்ற லிகான் தனது தண்டனைக் காலம் எவ்வளவு என்று ஒருபோதும் கேள்வி எழுப்பவில்லை.

68 ஆண்டுகளில் ஆறு சிறைகளில் வாழ்ந்த அவர், ஒவ்வொரு முறையும் சிறை வாழ்க்கையின் வழக்கத்திற்குப் பழகிக்கொண்டார்."6 மணிக்கு புல் ஹார்ன் மூலம் எழுப்பி, 'எண்ணிக்கைக்கு எழுந்து நிற்கவும், இது எண்ணிக்கை நேரம், 7 மணி உணவு நேரம், 8 மணி நேரம் வேலை நேரம்," என்று கூறுவார்கள்.

இவர் சில காலம் சமையல் மற்றும் சலவைப்பணியில் ஈடுபட்ட லிகான், பெரும்பாலும் ஒரு துப்புரவுப் பணியை செய்தார்.

”சுமார் 53 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த நிலையில், ஒரு வழக்கறிஞர் லிகானைப் பார்க்க விரும்புவதாக அவரிடம் கூறப்பட்டது.

பிராட்லி எஸ் பிரிட்ஜ். அடுத்த பெரிய சட்டப் பிரச்னையாக அவர் கருதிய, பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட சிறார்கள் குறித்த விஷயத்தை கையிலெடுத்தார்.

அந்த நேரத்தில், பென்சில்வேனியாவில் இதுபோன்ற சூழ்நிலைகளில் 525 கைதிகள் இருந்தனர், இது அமெரிக்காவிலேயே மிக அதிகமானது என்று பிரிட்ஜ் கூறுகிறார். ஃபிலடெல்ஃபியாவில் 325 பேர் இருந்தனர். அதிலும் மீக நீண்ட காலம் சிறையில் இருந்தவர் லிகான்.

”இந்தச் சந்திப்பு தான் லிகானின் கண்களைத் திறந்தது. அவரது தண்டனையைச் சட்டபூர்வமாக மேல்முறையீடு செய்த மனுவின் நகலை பிரிட்ஜ் அவருக்குக் காட்டியபோது தான் லிகான் தனது சிறைவாசத்தின் விதிமுறைகளை முதல்முறையாக அறிந்து கொண்டார்.

அடுத்த 15 ஆண்டுகளில் அவர் எடுத்த சில முடிவுகளை யாரும் புரிந்து கொள்வது சற்று சிரமம் தான். விடுதலையாக அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை நிராகரித்தார். அது வாழ்நாள் முழுவதும் அவருடன் தொடர்ந்து வரும் ஒரு இழிவாகவே அவர் கருதினார்.

2016 ஆம் ஆண்டில், அமெரிக்க உச்சநீதிமன்றம் அனைத்து சிறார் ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கும் தண்டனை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

அடுத்த ஆண்டு, லிகானின் தண்டனைக் காலம் 35 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்பட்டது. அதாவது அவர் முடித்திருந்த தண்டனைக் காலம் அவரை பரோலுக்கு விண்ணப்பிக்க அனுமதித்தது.

2020 நவம்பரில் நீதிபதி அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார். பிப்ரவரி 11 அன்று லிகானை அழைத்துச் செல்ல பிரிட்ஜ் மாண்ட்கோமெரி கவுண்டிக்குச் சென்றபோது, அந்த முன்னாள் கைதி மிகவும் அமைதியாக இருப்பதைக் கண்டார்.

"நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இறந்து விட்டனர். 83 வயதான இவர், இவ்வளவு காலம் காத்திருந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்ள முயற்சித்து வருகிறார். என் வாழ்நாள் முழுவதையும் செய்து வந்ததைத்தான் செய்யப்போகிறேன். துப்புரவு பணியை எனக்குக் கொடுங்கள்.” என்கிறார் இவர்.

ARUNACHALAM