IPL போட்டிகளில் இருந்து வெளியேறினார் அஸ்வின் ; விராட்கோலிக்கு ரூ.12லட்சம் அபராதம்

SOCIAL SHARE
Pin It

டெல்லி அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் (IPL) போட்டித்  தொடரில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அஸ்வின் விளக்கமளித்துள்ளார். தனது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக, இருக்க வேண்டிய நிலை உள்ளதால் தற்காலிகமாக IPL போட்டியில் இருந்து விலகுகிறேன் என்றும் ஆனால், தனது குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து குணமானவுடன் மீண்டும் அணியில் சேர்ந்து கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் பதிவு செய்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ்  அணியில் அஸ்வின் தற்காலிகமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவு தான் என்றாலும் மாற்று வீரரை வைத்து டெல்லி அணி சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வின் 10 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிக்களில்,  77 டெஸ்ட் போட்டிகளிலும், 111 ஒருநாள் மற்றும் 46 T20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவர் 409 டெஸ்ட் விக்கெட்டுகளை வைத்திருக்கிறார். வரலாற்றில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த  16 பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, விராட்கோலிக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் போட்டியில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில், 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. போட்டியில் மெதுவாக பந்து வீசியது (slow over rate) தொடர்பாக ஆர்.சி.பி கேப்டன் விராட் கோலிக்கு ரூ .12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மெதுவாக பந்து வீசியது தொடர்பான குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் கோஹ்லி நடவடிக்கையை எதிர்கொண்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM